நெடுஞ்சாலையில் கடைக்குள் புகுந்த லாரி ! பல்லடம் அருகே பதட்டத்தில் வியாபாரிகள் ! 

Spread the love

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த காரணம்பேட்டை, நால் ரோடு சிக்னல் போக்குவரத்து நிறைந்த பகுதியாகும். கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இப்பகுதியில் சிக்னலை ஒட்டி அதிகளவில் சாலை ஓர தள்ளுவண்டி கடைகள் மற்றும் பேருந்து நிருத்தம், காம்ப்ளக்ஸ் கடைகள் உள்ளது.

இந்நிலையில் கோவையில் இருந்து பல்லடம் நோக்கி கேரள பதிவெண் கொண்ட லாரி வந்துகொண்டிருந்தது. லாரி காரணம்பேட்டை சிக்னலை வேகமாக கடந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரமுள்ள தள்ளுவண்டி கடைகள் மீது மோதிவிட்டு நிற்காமல், அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த மாருதி வேன், இரு சக்கரவாகனங்களை துவசம் செய்துவிட்டு அங்கிருந்த காம்ப்ளெக்ஸ் கட்டிட கடைக்குள் புகுந்துள்ளது. இந்த விபத்தில் ஒருவர் பலியானது டன், மூன்று பேர் காயமடைந்துள்ளனர். இதனிடையே லாரி மோதிய வேகத்தில் அங்கிருந்த மின்சார இரும்பு கம்பம் சேதமடைந்துள்ளது.

இதனிடையே விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த பல்லடம் டி.எஸ்.பி தலைமையிலான காவல்துறையினர், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் உயிரிழந்த நபரின் உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் பேருந்து நிறுத்தம் அருகிலேயே நடந்த விபத்தினால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதனிடையே சிக்னல் முடிவதற்குள் அவசரப்பட்டு வேகமாக இயக்கியதால் லாரி கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டதா ? அல்லது ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இயக்கினாரா ? என்பது குறித்து போலீசாரின் விசாரணையின் முடிவில் தான் தெரியவரும். தேசிய நெடுஞ்சாலையில் நடந்த இந்த விபத்தினால் அப்பகுதியில் மின் தடை ஏற்பட்டுள்ளது.

Related Posts

புதிய வழித்தடங்களில் பேருந்துகளை இயக்க  பல்லடம் பாஜகவினர் கோரிக்கை !

Spread the love

Spread the loveபல்லடம் நகர பாரதீய ஜனதா கட்சியின் சார்பாக  பல்லடத்திலிருந்து செல்லும் மாநில நெடுஞ்சாலைகள் வழியாக புதிய வழித்தடத்தில் அரசு புறநகர் பேருந்துகளை இயக்க வலியுறுத்தி பாரதிய ஜனதா கட்சியின் பல்லடம் நகரத் தலைவர் பன்னீர் செல்வகுமார் தலைமையில், பல்லடம்…

Read more

யார் அந்த சார் ? விவகாரத்தில்.. யாரையோ காப்பாற்ற யாருக்கோ தண்டனையா ? பல்லடத்தில் வானதி சீனிவாசன் பேட்டி

Spread the love

Spread the loveதிருப்பூர் வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் மகாராணி அகல்யா பாய் ஹோல்கரின் 300 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி பல்லடம் எம்.சி. பழனிச்சாமி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. பாஜகாவின் தேசிய மகளிர்…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பார்க்க தவறிய செய்திகள்

“லவ் மேரேஜ்” படத்தின் முன்னோட்டம் வெளியீடு !

“லவ் மேரேஜ்” படத்தின் முன்னோட்டம் வெளியீடு !

நூற்பாலையை திறக்கக் கோரி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் !

நூற்பாலையை திறக்கக் கோரி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் !

ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்க, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கோரிக்கை !

ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்க, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கோரிக்கை !

ராமநாதபுரம் பேருந்து நிலையத்திற்கு “ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி” பெயர் சூட்ட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் !

ராமநாதபுரம் பேருந்து நிலையத்திற்கு “ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி” பெயர் சூட்ட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் !

“மெட்ராஸ் மேட்னி” படக்குழுவினரின் நன்றி அறிவிப்பு விழா !

“மெட்ராஸ் மேட்னி” படக்குழுவினரின் நன்றி அறிவிப்பு விழா !