பெத்தி படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்வு !

ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள கிராமத்து விளையாட்டு திரைப்படமான ‘பெத்தி’ படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில், வெங்கட சதீஷ் கிலாரு தயாரிப்பில் உருவாகியுள்ள ‘பெத்தி’, ஒரு கிராஸ்ஓவர் தடகள வீரரின் ஊக்கமூட்டும் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான பயணத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. கிராமத்து விளையாட்டு பின்னணியுடன் ஆக்ஷன், உணர்வுகள் மற்றும் வெற்றிக்கான போராட்டத்தை இணைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படம், ரசிகர்களிடையே ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பான்-இந்தியா அளவில் உருவாகியுள்ள ‘பெத்தி’ திரைப்படம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் வரும் ஜூன் 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு தயாரிப்பாளர் வெங்கட சதீஷ் கிலாரு தலைமையிலான படக்குழு நாடு முழுவதும் தீவிரமான புரமோஷன் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னையில் நடைபெற்ற சந்திப்பில், படக்குழுவினர் கலந்து கொண்டு, திரைப்படம் குறித்த பல சுவாரஸ்ய தகவல்கள் பகிர்ந்து கொண்டனர்.

இந்நிகழ்வினில், ஒளிப்பதிவாளர் ஆர். ரத்னவேலு பேசியதாவது, சேது, வாரணம் ஆயிரம், எந்திரன் போன்ற படங்கள் எனது திரைப்பயணத்தில் முக்கிய மைல்கற்களாக அமைந்தது போல, பெத்தி திரைப்படமும் எனக்கு மிகவும் முக்கியமான படமாக இருக்கும். இயக்குநர் புச்சி பாபு இந்தப் படத்திற்காக அற்புதமான திரைக்கதையை எழுதியிருக்கிறார். ஒரு திரைப்படம் காகிதத்தில் எழுதப்படலாம். ஆனால் அதற்கு உயிர் கொடுப்பது இசை, காட்சியமைப்பு மற்றும் சிறந்த நடிப்புதான். பெத்தி படத்தில் இவை அனைத்தும் மிகச் சிறப்பாக ஒன்றிணைந்துள்ளன. இந்தப் படம் நிச்சயமாக ரசிகர்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றார்.

நடிகர் திவ்யேந்து சர்மா பேசியதாவது, இங்கு இருப்பதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. குறிப்பாக, பெத்தி திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் நான் அறிமுகமாக இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது. ஒரு நடிகராக என் கம்ஃபர்ட் ஜோனை விட்டு வெளியே வந்து, புதிதாக ஏதாவது முயற்சி செய்வதற்கான அருமையான வாய்ப்பாக இந்த படம் அமைந்தது. ஒவ்வொரு கலைஞரும் தங்களிடம் இருக்கும் திறமைகளை முழுமையாக வெளிப்படுத்தும் ஒரு வாய்ப்பை கனவு காண்பார்கள். அந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய படம் தான் பெத்தி.

இந்த பயணம் இயக்குநர் புச்சி பாபுவுடன் தொடங்கியது. அவர் ஒரு சிறந்த மனிதர், சிறந்த இயக்குநர், அதைவிட சிறந்த நண்பர். இந்த வாய்ப்பை எனக்கு வழங்கியதற்கும், கதாபாத்திரத்தை என் பாணியில் வெளிப்படுத்துவதற்கான சுதந்திரத்தை அளித்ததற்கும் அவருக்கு மனமார்ந்த நன்றி. அவருடன் பணியாற்றியது மிகவும் அழகான அனுபவமாக இருந்தது என்றார்.

இயக்குநர் புச்சி பாபு  பேசியதாவது, எனக்கு சென்னை என்றால் மிகவும் பிடிக்கும். ஏனென்றால் எனக்கு மிகவும் பிடித்த பல கலைஞர்கள் இங்குதான் இருக்கிறார்கள். ஏ.ஆர். ரஹ்மான், ரத்னவேலு, தேவி ஸ்ரீ பிரசாத் என நான் மதிக்கும் பலர் சென்னையில் இருக்கிறார்கள். சென்னை என்பது வெறும் ஒரு நகரம் அல்ல, இங்கே சினிமாவே வாழ்கிறது. மக்கள் சினிமாவை நேசிக்கிறார்கள், சினிமா கலைஞர்களை மதிக்கிறார்கள். எனக்கு பிடித்த  மூத்த ஆளுமைகள் அனைவரும் சென்னை பற்றிப் பெருமையாகப் பேசுவார்கள். அப்போது எனக்கு அதன் மகத்துவம் முழுமையாகப் புரியவில்லை. ஆனால் இப்போது இங்கு வரும்போதெல்லாம் ஒரு புனிதமான இடத்திற்குச் செல்வது போன்ற உணர்வு வருகிறது.

எனக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதியும் இங்கே இருக்கிறார். என்னுடைய முதல் திரைப்படத்தில் அவர் நடித்திருந்தார். எப்போதும் எனக்கு ஆதரவாக இருப்பதற்கும், சென்னை வரும்போதெல்லாம் அன்புடன் வரவேற்பதற்கும் அவருக்கு நன்றி.

பெத்தி பற்றி சொல்ல வேண்டுமென்றால், இது மிகவும் உணர்வுப்பூர்வமான படம். பார்வையாளர்களை முழுமையாக ஈர்த்துக் கொள்ளும் ஒரு அனுபவமாக இருக்கும். குறிப்பாக இரண்டாம் பாதியில் ராம் சரண் கொடுத்திருக்கும் நடிப்பு மற்றும் அர்ப்பணிப்பை பார்த்தால் யாராலும் எளிதில் மறக்க முடியாது.

கடந்த சில நாட்களாக நான் சென்னையில் இருந்து படத்தை மீண்டும் மீண்டும் பார்த்து வருகிறேன். அதே நேரத்தில் ஹைதராபாத்திலும் சிறப்புக் காட்சிகள் நடக்கின்றன. படம் பார்த்த அனைவரும் தொலைபேசியில் அழைத்து பாராட்டி வருகிறார்கள். ‘மிகச் சிறந்த படம்’, ‘மிக அழகாக உருவாக்கியிருக்கிறீர்கள்’ என்று கூறுகிறார்கள். அது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.

இந்தப் படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணம் ராம் சரண் தான். பெத்தி என்றாலே எனக்கு ராம் சரண் தான் நினைவுக்கு வருகிறார். அவர் இந்தக் கதாபாத்திரத்திற்காக கொடுத்த உழைப்பு அளவிட முடியாதது. என்னை நம்பி இந்த வாய்ப்பை வழங்கியதற்காக அவருக்கு மனமார்ந்த நன்றி. திவ்யேந்து சாரின் நடிப்பைப் பார்த்தபோது, விஜய் சேதுபதி சாரை நினைவுபடுத்தியது. சிறிய சிறிய விஷயங்களில்கூட அவர் காட்டிய நுணுக்கமான நடிப்பு என்னை மிகவும் கவர்ந்தது. இந்தப் படத்தில் இணைந்ததற்காக அவருக்கு நன்றி.

இசைப்புயல் A. R. ரஹ்மான் பற்றி பேச வேண்டுமென்றால், அவரைப் பற்றி ஒரு புத்தகமே எழுதலாம். சிறுவயதிலிருந்தே அவருடைய இசைக்கு நான் மிகப்பெரிய ரசிகன். ஒருநாள் அவருடன் சேர்ந்து பணியாற்றுவேன் என்று கனவிலும் நினைத்ததில்லை. ஆனால் இன்று அது நனவாகியுள்ளது. இந்தப் படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் அற்புதமாக வந்துள்ளன. ரத்னவேலு சார் இந்தப் படத்தை உலகத் தரத்தில் காட்சிப்படுத்தியிருக்கிறார். நான் எழுதிய ஒவ்வொரு காட்சிக்கும் அவர் உயிர் கொடுத்துள்ளார். அவரது ஒளிப்பதிவு இல்லாமல் இந்தப் படம் இப்படியாக உருவாகியிருக்காது.

மேலும், சிவராஜ்குமார் சார் இந்தப் படத்தில் ஒரு உண்மையான குருவாகத் தோன்றுகிறார். குரு-சிஷ்யன் உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதை இந்தப் படம் அழகாக வெளிப்படுத்துகிறது. அந்தக் கதாபாத்திரத்திற்கு அவர் அளித்திருக்கும் மதிப்பும், கம்பீரமும் படத்தின் முக்கிய பலமாக இருக்கும். இந்தப் படத்தை ரசிகர்கள் அனைவரும் திரையரங்கில் பார்த்து கொண்டாடுவார்கள் என்று நம்புகிறேன் என்றார்.

நடிகர் சிவராஜ்குமார் பேசியதாவது, முதலில் இயக்குநர் புச்சி பாபுவுக்கு நன்றி. இந்தப் படத்தில் குரு கதாபாத்திரம் பற்றி அவர் என்னிடம் கூறியபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அதைவிட, ராம் சரணுடன் இணைந்து நடிக்கப் போகிறேன் என்ற செய்தி எனக்கு இன்னும் மகிழ்ச்சியை அளித்தது.

ராம் சரணையும், அவருடைய குடும்பத்தையும் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் மீது எனக்கு எப்போதும் ஒரு தனிப்பட்ட அன்பும் மரியாதையும் இருக்கிறது. அதனால் இந்தப் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் உடனே வந்தது. புச்சி பாபு கதையைச் சொன்னவுடன் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. உடனே ஒப்புக்கொண்டேன்.

ஆனால் அதன் பிறகு எனக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. சிகிச்சைக்காக நான் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதனால் இந்தப் படம் என்னால் செய்ய முடியாமல் போய்விடுமோ என்று நினைத்தேன். ஆனால் படக்குழுவினர் எனக்காக காத்திருந்தார்கள். அது என்னை மிகவும் நெகிழச் செய்தது. அதற்காக அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

இசைப்புயல் A. R. ரஹ்மான் சாரை நான் நீண்ட காலமாக அறிவேன். அவர் பின்னணி கலைஞராக இருந்த காலத்திலிருந்தே எனக்கு தெரியும். பின்னர் இசையமைப்பாளராக அவர் இசையை முற்றிலும் புதிய பரிமாணத்தில் கொண்டு சென்றார். பல சிறந்த இசையமைப்பாளர்கள் இருந்தாலும், ரஹ்மான் சார் தனித்துவமான பாணியில் தனி அடையாளத்தை உருவாக்கினார். ஆஸ்கார் விருதை வென்றது இந்திய இசைக்கே பெருமை சேர்த்த தருணம். அவருடைய இசையில் நான் நடித்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.

ரத்னவேலு சாருடன் பணியாற்றிய அனுபவமும் சிறப்பானது. படப்பிடிப்பு தளத்தில் அவருடன் தமிழில் பேசிக்கொண்டே இருப்பேன். அவர் காட்டிய அன்பும், மரியாதையும், அர்ப்பணிப்பும் என்னை மிகவும் கவர்ந்தது. எங்களுக்குள் ஒரு சிறப்பு இணைப்பு உருவானது.
தயாரிப்பாளர் மற்றும் முழு படக்குழுவும் மிகச் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். இந்தப் படத்தைப் பார்த்தால் எங்களுக்குள் இருந்த உறவும், ஒற்றுமையும் உங்களுக்குப் புரியும்.

ராம் சரண் சாரின் உழைப்பைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். இந்தக் கதாபாத்திரத்திற்காக அவர் தனது உடலை மாற்றிக்கொண்ட விதம், எடுத்துக்கொண்ட முயற்சி, அர்ப்பணிப்பு அனைத்தும் அசாதாரணமானவை. அவரது நடிப்பும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும். இந்தப் படத்தை அனைவரும் விரும்புவார்கள் என்று நம்புகிறேன். பெத்தி படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள். ஜூன் 4-ஆம் தேதி படம் வெளியாக இருக்கிறது. நீங்கள் எவ்வளவு ஆவலுடன் காத்திருக்கிறீர்களோ, நானும் அதே அளவு ஆவலுடன் காத்திருக்கிறேன் என்றார்.

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் பேசியதாவது, சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு ராம் சரண் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார். அப்போது ஒரு விஷயம் எனக்கு மிகவும் தோன்றியது. ஒரு மிகப் பெரிய ஆலமரமான சிரஞ்சீவி சாரின் மகனாக இருந்து, அதே உயரத்தை எட்ட முடியுமா என்று பலர் கேள்வி எழுப்பியிருக்கலாம். ஆனால் ராம் சரண் அதையும் தாண்டி தன்னுடைய தனித்துவமான இடத்தை உருவாக்கியிருக்கிறார். அவர் இன்னொரு ஆலமரமாக வளர்ந்திருக்கிறார். அப்போது என் மகனும் அங்கே இருந்தான். நான் அவனிடம், ‘நீ என்னைவிட பெரியவனாக வரலாம்’ என்று சொன்னேன். அதற்கான உதாரணமாக ராம் சரணைச் சுட்டிக்காட்டினேன். இளம் தலைமுறைக்கு இப்படிப்பட்ட உதாரணங்கள் மிகவும் முக்கியம்.

ஒரு நாள் சுகுமார் என்னைச் சந்திக்க விரும்புவதாகச் சொன்னார்கள். அதன்பிறகு புச்சி பாபுவை அறிமுகப்படுத்தினார்கள். அவர் இந்தக் கதையைப் பற்றி பேசினார். அந்த நேரத்தில் நான் பரிசோதனை முயற்சிகள் நிறைந்த படங்களிலும், வித்தியாசமான படைப்புகளிலும் அதிக கவனம் செலுத்தி வந்தேன். ஆனால் பெத்தி போன்ற ஒரு திரைப்படம் வந்தபோது அதில் இருக்கும் ஆற்றலும், அர்ப்பணிப்பும் என்னை ஈர்த்தது.

இந்த மாதிரியான பெரிய வர்த்தகப் படங்களில் நடிகர்கள் தங்கள் உயிரையே கொடுத்து உழைக்கிறார்கள். நடிப்பிலும், நடனத்திலும், ஒவ்வொரு காட்சியிலும் மிகப்பெரிய அர்ப்பணிப்பு இருக்கிறது. மேலும் இப்படங்கள் பல மொழிகளில் வெளியாகி உலகம் முழுவதும் சென்று சேர்கின்றன. அதனால் அனைவரின் உழைப்பும் மிகப் பெரிய அளவில் மக்களை சென்றடைகிறது.

ராம் சரண் இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் முழுமையான அர்ப்பணிப்புடன் செயல்பட்டிருக்கிறார். ஒவ்வொரு ஃபிரேமிலும் அவரது உழைப்பு தெரியும். இசையும் காலத்திற்கு ஏற்ப தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது. ரோஜா காலத்திலிருந்து இன்று வரை இசை மற்றும் திரைப்படத் துறையில் ஏற்பட்ட மாற்றங்களை நான் நேரில் பார்த்திருக்கிறேன். பலர் என்னிடம் இருந்து ஊக்கமடைந்திருக்கலாம். ஆனால் நானும் பலரிடமிருந்து ஊக்கமடைந்திருக்கிறேன்.

தெலுங்குத் திரைப்படத் துறையில் M. M. கீரவாணி, தேவி ஸ்ரீபிரசாத், தமன் போன்ற திறமையான இசையமைப்பாளர்கள் இருக்கிறார்கள். தெலுங்கு சினிமா கடந்த சில ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது. அவர்கள் மிகவும் லட்சியத்துடன் செயல்படுகிறார்கள். திரைப்படத் தயாரிப்பின் தரத்தையும் தொடர்ந்து உயர்த்தி வருகிறார்கள். அந்தத் துறையின் ஒரு பகுதியாக இருப்பதில் எனக்கு பெருமை. பெத்தி படத்தில் பணியாற்றிய அனுபவம் எனக்கு முதல் படம் செய்வது போன்ற புதிய உற்சாகத்தை அளித்தது.

இன்றுக் காலைதான் இந்தப் படத்தின் பின்னணி இசைப் பணிகளை முடித்தோம். முடிந்த பிறகும் ‘இதை இன்னும் சிறப்பாக செய்ய முடியுமா ?’, ‘இன்னும் ஏதாவது சேர்க்க வேண்டுமா ?’ என்ற ஆர்வம் எங்களுக்குள் இருந்தது. அந்த உற்சாகமே இந்தப் படத்தின் சிறப்பு. சிவராஜ்குமார் சாருக்கும், படக்குழுவில் உள்ள அனைவருக்கும் என் நன்றி. இந்தப் படத்தை உருவாக்கிய அனுபவத்தை நாங்கள் அனைவரும் மிகவும் ரசித்தோம். நீங்கள் அனைவரும் இந்தப் படத்தை விரும்புவீர்கள் என்று நம்புகிறேன் என்றார்.

நடிகர்  ராம் சரண் பேசியதாவது, உண்மையாகச் சொன்னால், சில நேரங்களில் என்ன பேச வேண்டும் என்று தெரியாமல் போய்விடும். இப்போதும் அந்த மாதிரியான ஒரு தருணத்தில்தான் நான் இருக்கிறேன். சென்னை வந்தாலே எனக்கு எப்போதும் இப்படியான உணர்வு ஏற்படும்.
முதலில், இந்த மேடையில் இத்தனை ஜாம்பவான்கள் இருக்கிறார்கள். அவர்களின் முன்னிலையில் என்ன பேசுவது என்ற எண்ணமே வருகிறது.

சென்னை எனக்கு எப்போதும் ஒரு சிறப்பான இடம். நான் பிறந்து வளர்ந்த நகரம் இது. அதனால் ஆர்.ஆர்.ஆர்., மகதீரா அல்லது வேறு எந்தப் படமாக இருந்தாலும், சென்னைக்கு வந்து புரமோஷன் செய்யும் போது வீட்டிற்கு வந்த உணர்வே கிடைக்கிறது. மேலும், என் அம்மாவும் இங்கு பிறந்தவர். அதனால் சென்னை எனக்கு என் தாயின் ஊர் என்ற பாசமான உணர்வை அளிக்கிறது.

பெத்தி திரைப்படம் குறித்து படக்குழுவினர் அனைவரும் ஏற்கனவே பேசிவிட்டார்கள். இந்தப் படத்தை முடிக்க எங்களுக்கு சுமார் இரண்டரை ஆண்டுகள் ஆனது. அதில் 285 நாட்களுக்கும் மேலாக நாங்கள் உழைத்தோம். ஆனால் எங்களைவிட அதிகமாக உழைத்தவர் இயக்குநர் புச்சி பாபு. கடந்த ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளாக அவர் இந்தப் படத்திற்காக உழைத்திருக்கிறார்.
நாங்கள் கஷ்டப்பட்டோம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் இப்படிப்பட்ட சிறந்த கலைஞர்கள் ஒரு படத்தில் இருக்கும்போது அந்தப் பயணம் கஷ்டமாகத் தோன்றாது. இந்தக் கதையை எங்களிடம் கொண்டு வந்த சுகுமார் சாருக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

இசைப்புயல் A. R. ரஹ்மான் சார் இந்தப் படத்தின் மையத் தூண். நாங்கள் அனைவரும் ஒரு வீட்டைத் தாங்கும் தூண்கள் என்றால், அதன் நடுவில் இருக்கும் மிகப்பெரிய ஆதாரத் தூண் அவர் தான். கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக அதிகாலை வரை விழித்திருந்து பின்னணி இசைப் பணிகளில் ஈடுபட்டிருக்கிறார். அவரது அர்ப்பணிப்பு எங்களுக்கு எல்லாம் மிகப்பெரிய உத்வேகமாக இருக்கிறது.

சிவராஜ்குமார் சார் திரையில் தோன்றினாலே ஒரு தீப்பொறி போல ஆற்றல் உருவாகும். ஜெயிலர் படத்தில் அவருடைய கதாபாத்திரத்தை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். காரில் பயணம் செய்யும்போதுகூட அந்த காட்சிகளை மீண்டும் மீண்டும் பார்ப்பேன். குறிப்பாக அவர் மெதுவாக நடந்து வரும் காட்சியும், பீடி பிடிக்கும் அந்த ஸ்டைலும் இன்று ஒரு ஐகானிக் தருணமாக மாறியுள்ளது. அவரது கண்களே ஆயிரம் வார்த்தைகள் பேசும்.

ஒளிப்பதிவாளர் ஆர். ரத்னவேலு சார் பற்றி என்ன சொல்வது? அவருடன் நான் நான்கு திரைப்படங்களில் பணியாற்றியிருக்கிறேன். இரண்டு படங்களை நான் தயாரித்தபோதும் அவர் உடன் இருந்தார். அவர் ஒரு உண்மையான ஜாம்பவான். எந்திரன் படத்தில் அவர் உருவாக்கிய காட்சிகள், குறிப்பாக பிரம்மாண்ட பாடல் காட்சிகள், என்னை மிகவும் கவர்ந்தவை. ‘அந்த மாதிரியான ஒரு காட்சியை எனக்கும் கொடுங்கள் சார்’ என்று நான் எப்போதும் அவரிடம் கேட்பேன்.
ரஜினி சார், கமல் சார், ஷங்கர் சார் போன்ற மகத்தான கலைஞர்களுடன் பணியாற்றிய அனுபவம் அவருக்கு இருக்கிறது. ஆனால் அந்த அனுபவத்தின் பெருமையை அவர் ஒருபோதும் வெளிக்காட்ட மாட்டார். அதுவே அவரது சிறப்பு. என்னைப் போலவே திவ்யேந்து இந்தப் படத்தில் மிகப்பெரிய உழைப்பை தந்துள்ளார் அவரது காட்சிகளை ரசிகர்கள் கொண்டாடுவார்கள்.

இந்தப் படத்தை நான் வெறும் ஒரு நடிகராக செய்யவில்லை. மனதார காதலித்து செய்தேன். ஒவ்வொரு நாள் படப்பிடிப்பு முடிந்து வீட்டிற்கு வந்ததும், என் நண்பர்களிடமும், அம்மாவிடமும், அந்த நாள் ஷூட்டிங் அனுபவங்களைப் பற்றியே தொடர்ந்து பேசிக்கொண்டிருப்பேன். ‘போதும், நிறுத்து… நாள் முழுவதும் இதைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறாய்’ என்று அவர்கள் சொல்லும் அளவுக்கு பெத்தி படம் என் மனதில் ஆழமாக பதிந்திருந்தது.

என் வீட்டில் எப்போதும் ஒரு விஷயம் சொல்வார்கள். ‘ஒரு படத்தைப் பற்றி நீ வீட்டிற்கு வந்த பிறகும் தொடர்ந்து பேசினால், அந்த படம் கண்டிப்பாக பெரிய வெற்றி பெறும்’ என்று. ஆர்.ஆர்.ஆர்., ரங்கஸ்தலம், மகதீரா போன்ற படங்களைப் பற்றியும் நான் அப்படித்தான் பேசினேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் பெத்தி படத்தைப் பற்றியே வீட்டில் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறேன். அதுவே இந்தப் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என்பதற்கான என் நம்பிக்கை. குடும்பத்தோடு, குறிப்பாக குழந்தைகளோடு வந்து பார்க்க வேண்டிய படம் இது. மிகவும் ஊக்கமளிக்கும், மனதைத் தொடும் திரைப்படமாக இருக்கும்.

என் வாழ்நாள் முழுவதும் நினைவில் நிற்கும் ஒரு படத்தை இயக்குநர் புச்சி பாபுவும், சுகுமார் சாரும் எனக்கு கொடுத்திருக்கிறார்கள். அதற்காக அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். இந்தப் படம் எங்கள் அனைவரின் உழைப்பு. ஜூன் 4-ஆம் தேதி ரசிகர்கள் திரையரங்கில் இந்த அனுபவத்தை கொண்டாடுவார்கள் என்று நம்புகிறேன் என்றார்.

ராம் சரண், ஜான்வி கபூர், சிவ ராஜ்குமார், ஜகபதி பாபு மற்றும் திவ்யேந்து சர்மா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படம், இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. சென்னை பத்திரிகையாளர் சந்திப்பும் ரசிகர்களிடையே படத்தின் மீதான ஆர்வத்தை மேலும் உயர்த்தியுள்ளது.

ஏற்கனவே ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த பாடல்கள் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. மேலும், சமீபத்தில் வெளியான டிரெய்லர், ஒரு கிராஸ்ஓவர் தடகள வீரரின் ஊக்கமூட்டும் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான பயணத்தை வலுவாக வெளிப்படுத்தி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளது. தயாரிப்பாளர் வெங்கட சதீஷ் கிலாரு மற்றும் அவரது குழு, இந்தியா முழுவதும் தீவிரமான புரமோஷன் திட்டங்களை மேற்கொண்டு, படத்தின் எதிர்பார்ப்பை மேலும் உயர்த்த திட்டமிட்டுள்ளனர்.

  • dhamaraimurasu

    dhamaraimurasu

    dhamaraimurasu admin

    Related Posts

    “லைட் வெயிட் பேபி” விறுவிறுப்பான படப்பிடிப்பில் நடிகர் விக்கல்ஸ் விக்ரம் !

    பிக் பாஸ்’ பிரபலம் நடிகர் விக்கல்ஸ் விக்ரம் கதையின் நாயகனாக அறிமுகமாகும் ‘லைட் வெயிட் பேபி ‘ படத்தின் அறுபது சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு, படக் குழுவினர் மகிழ்ச்சி.  தெரிவித்துள்ளனர். இயக்குநர் கே. சி. குரு இயக்கத்தில்…

    Read more

    “சம்ஹாரம்” திரைப்படத்தின் விமர்சனம்

    வித்யா புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் வேல்முருகன் தயாரிப்பில், பிரஜின் பத்மநாபன், ஷருமிதா, நியா வர்கீஸ், கணேஷ் சாவரட்டில் உள்ளிட்டோர் நடிப்பில், ராம் பிரபா இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “சம்ஹாரம்”. கதைப்படி.. திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஷருமிதா இரவு நேரத்தில் வீட்டைவிட்டு தப்பித்து, தான்…

    Read more

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    பார்க்கத்தவறிய செய்திகள்

    போதைப்பொருள் நடமாட்டத்தை வனத்துறையினருடன் இணைந்து கண்காணித்த காவல்துறையினர் !

    போதைப்பொருள் நடமாட்டத்தை வனத்துறையினருடன் இணைந்து கண்காணித்த காவல்துறையினர் !

    பழனி அருகே.. நெய்க்காரப்பட்டி கோவில் திருவிழா ! கூட்டத்தை கட்டுப்படுத்த திணறும் காவல்துறையினர் !

    பழனி அருகே.. நெய்க்காரப்பட்டி கோவில் திருவிழா ! கூட்டத்தை கட்டுப்படுத்த திணறும் காவல்துறையினர் !

    “லைட் வெயிட் பேபி” விறுவிறுப்பான படப்பிடிப்பில் நடிகர் விக்கல்ஸ் விக்ரம் !

    “லைட் வெயிட் பேபி” விறுவிறுப்பான படப்பிடிப்பில் நடிகர் விக்கல்ஸ் விக்ரம் !

    மடத்துக்குளம் அருகே.. கார் மோதி 2 வயது குழந்தை பலி ! பெற்றோர் படுகாயம் ! 

    மடத்துக்குளம் அருகே.. கார் மோதி 2 வயது குழந்தை பலி ! பெற்றோர் படுகாயம் ! 

    “சம்ஹாரம்” திரைப்படத்தின் விமர்சனம்

    “சம்ஹாரம்” திரைப்படத்தின் விமர்சனம்

    “மூன்றாம் கண்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

    “மூன்றாம் கண்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

    கேன்ஸ் திரைப்பட விழாவில் “பாலன் தி பாய்” திரைப்படத்திற்கு வரவேற்பு !

    கேன்ஸ் திரைப்பட விழாவில் “பாலன் தி பாய்” திரைப்படத்திற்கு வரவேற்பு !

    “அந்தரன்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்வு !

    “அந்தரன்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்வு !

    “ஸ்லம் டாக்” படத்தின் டீசர் ஜூன் 8 ஆம் தேதி வெளியாகிறது !

    “ஸ்லம் டாக்” படத்தின் டீசர் ஜூன் 8 ஆம் தேதி வெளியாகிறது !

    தி இந்தியா ஸ்டோரி திரைப்படம் ஜூலை 24 ஆம் தேதி வெளியாகிறது !

    தி இந்தியா ஸ்டோரி திரைப்படம் ஜூலை 24 ஆம் தேதி வெளியாகிறது !

    அங்கீகாரம் படத்திற்கு “U” சான்றிதழ் வழங்கிய தணிக்கை வாரியம் !

    அங்கீகாரம் படத்திற்கு “U” சான்றிதழ் வழங்கிய தணிக்கை வாரியம் !

    ஒப்பந்ததாரரிடம் 30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளர் கைது ! பல்லடம் அருகே பரபரப்பு !

    ஒப்பந்ததாரரிடம் 30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளர் கைது ! பல்லடம் அருகே பரபரப்பு !

    “கலர்ஸ்” நிறுவனத்தை திறந்து வைத்த நடிகை பிரியா பவானி சங்கர் !

    “கலர்ஸ்” நிறுவனத்தை திறந்து வைத்த நடிகை பிரியா பவானி சங்கர் !

    “ஈகோ ராமன்” படத்தின் விமர்சனம்

    “ஈகோ ராமன்” படத்தின் விமர்சனம்

    பெத்தி படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்வு !

    பெத்தி படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்வு !

    பழனி அருகே அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் காவலப்பட்டி கிராமத்தினர் !

    பழனி அருகே அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் காவலப்பட்டி கிராமத்தினர் !

    நடன இயக்குனர் “ஷெரீப்_250” கொண்டாட்டம் !

    நடன இயக்குனர் “ஷெரீப்_250” கொண்டாட்டம் !

    தனித்துவமான வேடத்தில் சசிகுமார் நடித்துள்ள புதிய படத்தின் அப்டேட்ஸ் !

    தனித்துவமான வேடத்தில் சசிகுமார் நடித்துள்ள புதிய படத்தின் அப்டேட்ஸ் !

    “உயிரிணையே” இசை ஆல்பம் வெளியீட்டு விழா !

    “உயிரிணையே” இசை ஆல்பம் வெளியீட்டு விழா !

    “பெத்தி” திரைப்படம் ராம் சரணுக்கு தேசிய விருதை பெற்றுத்தரும் ! – சிவராஜ்குமார்

    “பெத்தி” திரைப்படம் ராம் சரணுக்கு தேசிய விருதை பெற்றுத்தரும் ! – சிவராஜ்குமார்

    சிம்பு நடிக்கும் “அரசன்” படத்தின் புதிய தகவல்கள் !

    சிம்பு நடிக்கும் “அரசன்” படத்தின் புதிய தகவல்கள் !

    டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்தால், கொள்ளை லாபம் பார்க்கும் FL-2 பார் உரிமையாளர்கள் !

    டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்தால், கொள்ளை லாபம் பார்க்கும் FL-2 பார் உரிமையாளர்கள் !

    பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்குமான பாதுகாப்பு எங்கே ? அதிகரிக்கும் பாலியல் சீண்டல்கள் !

    பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்குமான பாதுகாப்பு எங்கே ? அதிகரிக்கும் பாலியல் சீண்டல்கள் !

    “பாதாம்கீர்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியீடு !

    “பாதாம்கீர்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியீடு !

    பரபரப்பான ஆக்ஷ்ன் த்ரில்லர் கதைகளத்தில் உருவாகும் “சமவர்த்தி” !

    பரபரப்பான ஆக்ஷ்ன் த்ரில்லர் கதைகளத்தில் உருவாகும் “சமவர்த்தி” !

    “நாக பந்தம் திரைப்படம் ஜூலை 3 ஆம் தேதி வெளியீடு !

    “நாக பந்தம் திரைப்படம் ஜூலை 3 ஆம் தேதி வெளியீடு !

    “தி இந்தியா ஸ்டோரி” படத்தின் டீசர் விரைவில் வெளியீடு !

    “தி இந்தியா ஸ்டோரி” படத்தின் டீசர் விரைவில் வெளியீடு !

    எதிர்பார்ப்பை ஏற்படுத்திய “கான் சிட்டி” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

    எதிர்பார்ப்பை ஏற்படுத்திய “கான் சிட்டி” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

    சோனி மியூசிக் நிறுவனம் வெளியிட்ட ராப்பர் கிட் சாந்தேவின் “நா வேற லெவல்” பாடல் !

    சோனி மியூசிக் நிறுவனம் வெளியிட்ட ராப்பர் கிட் சாந்தேவின் “நா வேற லெவல்” பாடல் !

    ஆக்ஷ்ன், த்ரில்லர் கதையில் உருவாகிவரும் “கொம்பா” திரைப்படம் !

    ஆக்ஷ்ன், த்ரில்லர் கதையில் உருவாகிவரும் “கொம்பா” திரைப்படம் !

    “கங்கணம்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

    “கங்கணம்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

    “அதிரடி” படவிழாவில் கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் !

    “அதிரடி” படவிழாவில் கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் !

    வரவேற்பை குவிக்கும் “தாழ் திறவா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் !

    வரவேற்பை குவிக்கும் “தாழ் திறவா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் !

    “விசாரணை கைதி” படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !

    “விசாரணை கைதி” படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !

    “பிளாஸ்ட்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

    “பிளாஸ்ட்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

    “பெத்தி” படத்தின் டிரெய்லர் வெளியீடு !

    “பெத்தி” படத்தின் டிரெய்லர் வெளியீடு !

    “ஹபீபி” படத்தின் இசை வெளியீட்டு விழா !

    “ஹபீபி” படத்தின் இசை வெளியீட்டு விழா !

    கருப்பசாமியாக களமிறங்கி அநீதியை அழிக்கும் சூர்யா ! “கருப்பு” படத்தின் விமர்சனம்

    கருப்பசாமியாக களமிறங்கி அநீதியை அழிக்கும் சூர்யா ! “கருப்பு” படத்தின் விமர்சனம்

    சிவகார்த்திகேயன் நடிக்கும் “சேயோன்” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்த கமல்ஹாசன்

    சிவகார்த்திகேயன் நடிக்கும் “சேயோன்” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்த கமல்ஹாசன்

    “சட்டென்று மாறுது வானிலை” படத்தின் விமர்சனம்

    “சட்டென்று மாறுது வானிலை” படத்தின் விமர்சனம்

    “சிலம்பம்” படத்தின் இசை வெளியீட்டு விழா !

    “சிலம்பம்” படத்தின் இசை வெளியீட்டு விழா !

    நலத்திட்ட உதவிகள் வழங்கிய சௌந்தர்யா ரஜினிகாந்த் !

    நலத்திட்ட உதவிகள் வழங்கிய சௌந்தர்யா ரஜினிகாந்த் !

    மாமியாரை தாக்கிய மருமகன் கொலை ! பல்லடம் அருகே பரபரப்பு !

    மாமியாரை தாக்கிய மருமகன் கொலை ! பல்லடம் அருகே பரபரப்பு !

    இயக்குனராக அவதாரம் எடுத்த நடிகர் ராம் போதினேனி !

    இயக்குனராக அவதாரம் எடுத்த நடிகர் ராம் போதினேனி !

    பிரபுதேவா, வடிவேலு நடித்துள்ள “பேங் பேங்” படத்தின் படப்பிடிப்பு நிறைவு !

    பிரபுதேவா, வடிவேலு நடித்துள்ள “பேங் பேங்” படத்தின் படப்பிடிப்பு நிறைவு !

    மர்மம், கொலை, கிராமத்து ரகசியங்கள் நிறைந்த “கொலை சேவல்” திரைப்படம் ஜீ_5 தளத்தில் ஒளிபரப்பு !

    மர்மம், கொலை, கிராமத்து ரகசியங்கள் நிறைந்த “கொலை சேவல்” திரைப்படம் ஜீ_5 தளத்தில் ஒளிபரப்பு !

    கலை துறையினருக்கு, கலை ஞானியின் கோரிக்கை !

    கலை துறையினருக்கு, கலை ஞானியின் கோரிக்கை !

    நிலக்கோட்டை அருகே கத்தியுடன் சுற்றித்திரிந்த 2 வாலிபர்கள் கைது !

    நிலக்கோட்டை அருகே கத்தியுடன் சுற்றித்திரிந்த 2 வாலிபர்கள் கைது !

    திண்டுக்கல்லில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் பலி !

    திண்டுக்கல்லில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் பலி !

    மீரா கதிரவன் இயக்கத்தில் உருவாகியுள்ள “ஹபீபி” படத்திற்கு யூ சான்றிதழ் !

    மீரா கதிரவன் இயக்கத்தில் உருவாகியுள்ள “ஹபீபி” படத்திற்கு யூ சான்றிதழ் !

    “உத்சவ் 2026” விழாவில் “தேவி ரத்னா” விருதால் கௌரவிக்கப்பட்ட நடிகர் ரவி மோகன் !

    “உத்சவ் 2026” விழாவில் “தேவி ரத்னா” விருதால் கௌரவிக்கப்பட்ட நடிகர் ரவி மோகன் !

    பழமையான கதையின் பதிவாக உருவாகும் நாட்டார் மர்மகதை !

    பழமையான கதையின் பதிவாக உருவாகும் நாட்டார் மர்மகதை !

    “பெத்தி” படம் மூலம் சர்வதேச விநியோகத்தில் களமிறங்கும் ஹொம்பாலே ஃபிலிம்ஸ்

    “பெத்தி” படம் மூலம் சர்வதேச விநியோகத்தில் களமிறங்கும் ஹொம்பாலே ஃபிலிம்ஸ்

    சிவகார்த்திகேயனின் “வேலும் மயிலும்” ஆன்மீக இசைப் பாடல் வெளியீடு !

    சிவகார்த்திகேயனின் “வேலும் மயிலும்” ஆன்மீக இசைப் பாடல் வெளியீடு !

    “சைலண்ட் இன்ஃபுளூயன்சர்” இசை ஆல்பம் வெளியீடு !

    “சைலண்ட் இன்ஃபுளூயன்சர்” இசை ஆல்பம் வெளியீடு !

    “எக்ஸாம்” இணைய தொடரில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள துரை சுதாகர் !

    “எக்ஸாம்” இணைய தொடரில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள துரை சுதாகர் !

    பாராட்டுக்களை குவிக்கும் “அங்கீகாரம்” படத்தின் டிரெய்லர் !

    பாராட்டுக்களை குவிக்கும் “அங்கீகாரம்” படத்தின் டிரெய்லர் !

    வடசென்னை_2 படத்தின் புதிய அப்டேட் அறிவித்த ஐஸ்வர்யா ராஜேஷ் !

    வடசென்னை_2 படத்தின் புதிய அப்டேட் அறிவித்த ஐஸ்வர்யா ராஜேஷ் !

    “சட்டென்று மாறுது வானிலை” படத்தின் முன் வெளியீட்டு விழா !

    “சட்டென்று மாறுது வானிலை” படத்தின் முன் வெளியீட்டு விழா !

    நகைச்சுவை, த்ரில்லர் கதையில் சந்தானம் நடிப்பில் உருவாகும் “லவ் பைட்” !

    நகைச்சுவை, த்ரில்லர் கதையில் சந்தானம் நடிப்பில் உருவாகும் “லவ் பைட்” !

    ப்ரைம் வீடியோ தயாரிப்பில் உருவாகியுள்ள “சிஸ்டம்” படத்தின் டிரெய்லர் வெளியீடு !

    ப்ரைம் வீடியோ தயாரிப்பில் உருவாகியுள்ள “சிஸ்டம்” படத்தின் டிரெய்லர் வெளியீடு !

    மாணவர்களின் எதிர்காலம் ஒளிர, கபிலன் வைரமுத்து வாழ்த்து !

    மாணவர்களின் எதிர்காலம் ஒளிர, கபிலன் வைரமுத்து வாழ்த்து !

    “29” படத்தின் விமர்சனம்

    “29” படத்தின் விமர்சனம்

    சென்னைஸ் அமிர்தாவின் விளம்பர தூதர் ஶ்ரீ லீலா மாணவர்களுடன் கலந்துரையாடல் !

    சென்னைஸ் அமிர்தாவின் விளம்பர தூதர் ஶ்ரீ லீலா மாணவர்களுடன் கலந்துரையாடல் !

    ஜீ_5 தமிழில் ஒளிபரப்பாக உள்ள “வாரண்ட்” தொடரின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

    ஜீ_5 தமிழில் ஒளிபரப்பாக உள்ள “வாரண்ட்” தொடரின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

    விலங்கு தொடர் இயக்குனரின் அடுத்த படைப்பு “வாரண்ட்” ஜீ_5 தமிழில் மே 22 முதல் ஒளிபரப்பு !

    விலங்கு தொடர் இயக்குனரின் அடுத்த படைப்பு “வாரண்ட்” ஜீ_5 தமிழில் மே 22 முதல் ஒளிபரப்பு !

    “கான் சிட்டி” படத்தின் வைரலாகும் “நான் தான் கிங்கு” லிரிக்கல் வீடியோ !

    “கான் சிட்டி” படத்தின் வைரலாகும் “நான் தான் கிங்கு” லிரிக்கல் வீடியோ !

    “பவர் பேட்டா” படத்தின் அதிரடி கிளிம்ப்ஸ் வெளியீடு !

    “பவர் பேட்டா” படத்தின் அதிரடி கிளிம்ப்ஸ் வெளியீடு !

    மாளவிகா மேனன் நடிப்பில் 6 மொழிகளில் பிரமாண்டமாக உருவாகும் “சிலந்தி_2” திரைப்படம் !

    மாளவிகா மேனன் நடிப்பில் 6 மொழிகளில் பிரமாண்டமாக உருவாகும் “சிலந்தி_2” திரைப்படம் !

    சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய பாஜக நிர்வாகிகள் மீது நடவடிக்கை !

    சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய பாஜக நிர்வாகிகள் மீது நடவடிக்கை !

    மெகா ஸ்டார் ராம்சரண் நடிப்பில் உருவாகியுள்ள “பெத்தி” படத்திற்கு அதிகரிக்கும் எதிர்பார்ப்பு

    மெகா ஸ்டார் ராம்சரண் நடிப்பில் உருவாகியுள்ள “பெத்தி” படத்திற்கு அதிகரிக்கும் எதிர்பார்ப்பு

    ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள துல்கர் சல்மானின் “ஐ அம் கேம்” திரைப்படம் !

    ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள துல்கர் சல்மானின் “ஐ அம் கேம்” திரைப்படம் !

    “சேயோன்” படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்த நடிகை பாக்யஶ்ரீ  போர்ஸ் !

    “சேயோன்” படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்த நடிகை பாக்யஶ்ரீ  போர்ஸ் !

    “காவிய காதல்” படத்தின் தலைப்பு அறிவிப்பு வீடியோவுக்கு வரவேற்பு !

    “காவிய காதல்” படத்தின் தலைப்பு அறிவிப்பு வீடியோவுக்கு வரவேற்பு !

    கேன்ஸ் பட விழாவில் “மஞ்சும்மல் பாய்ஸ்” இயக்குநரின் அடுத்த படைப்பு !

    கேன்ஸ் பட விழாவில் “மஞ்சும்மல் பாய்ஸ்” இயக்குநரின் அடுத்த படைப்பு !

    தனுஷ் திறமைக்கும், புகழுக்கும் “கர” வலு சேர்த்ததா !.? “கர” படத்தின் விமர்சனம்

    தனுஷ் திறமைக்கும், புகழுக்கும் “கர” வலு சேர்த்ததா !.? “கர” படத்தின் விமர்சனம்

    “பிரௌன் மணி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட நடிகர் ரியோ ராஜ் !

    “பிரௌன் மணி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட நடிகர் ரியோ ராஜ் !

    ராம்சரண் நடிப்பில் உருவாகியுள்ள “பெத்தி” திரைப்படம் ஜூன் 4 ஆம் தேதி வெளியாகிறது !

    ராம்சரண் நடிப்பில் உருவாகியுள்ள “பெத்தி” திரைப்படம் ஜூன் 4 ஆம் தேதி வெளியாகிறது !

    “தமிழ் கிறுக்கன்” ஆல்பம், லோகோ & தலைப்பு வெளியீடு !

    “தமிழ் கிறுக்கன்” ஆல்பம், லோகோ & தலைப்பு வெளியீடு !

    படம் வெளியாவதற்கு முன்பே விருதுகளை குவிக்கும் “என்ன விலை” திரைப்படம் !

    படம் வெளியாவதற்கு முன்பே விருதுகளை குவிக்கும் “என்ன விலை” திரைப்படம் !

    மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் படத்திற்கு “மொத ராத்திரி” என பெயர் அறிவிப்பு !

    மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் படத்திற்கு “மொத ராத்திரி” என பெயர் அறிவிப்பு !

    “பரிமளா & கோ” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !

    “பரிமளா & கோ” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !

    மாற்றுத்திறனாளி சாதனையாளர்கள் குறித்த முதல் தமிழ் பிரெய்லி நூல் வெளியீடு !

    மாற்றுத்திறனாளி சாதனையாளர்கள் குறித்த முதல் தமிழ் பிரெய்லி நூல் வெளியீடு !

    “எடிசன் விருதுகள்” 18 வது ஆண்டு முன்னோட்ட நிகழ்வு !

    “எடிசன் விருதுகள்” 18 வது ஆண்டு முன்னோட்ட நிகழ்வு !

    “29” படத்தின் முன் வெளியீட்டு விழா !

    “29” படத்தின் முன் வெளியீட்டு விழா !

    காரைக்குடியில் பிரபல மருத்துவ தம்பதிகளின் குழந்தைக்கு பரதநாட்டிய அரங்கேற்றம் !

    காரைக்குடியில் பிரபல மருத்துவ தம்பதிகளின் குழந்தைக்கு பரதநாட்டிய அரங்கேற்றம் !

    “சூப்பர் பி மேன்” படத்தின் முதல் பார்வை வெளியீடு !

    “சூப்பர் பி மேன்” படத்தின் முதல் பார்வை வெளியீடு !

    கன்னியாகுமரி மாவட்டத்தில் மழைநீர் வடிகால், பாசன கால்வாயில் கலப்பதால் சுகாதார சீர்கேடு !

    கன்னியாகுமரி மாவட்டத்தில் மழைநீர் வடிகால், பாசன கால்வாயில் கலப்பதால் சுகாதார சீர்கேடு !

    “சத்யவான் சாவித்திரி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

    “சத்யவான் சாவித்திரி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

    “எக்ஸாம்”தமிழ் ஒரிஜினல் இணைய தொடரின் முன்னோட்டம் வெளியீடு !

    “எக்ஸாம்”தமிழ் ஒரிஜினல் இணைய தொடரின் முன்னோட்டம் வெளியீடு !

    யாஷ் நடித்துள்ள “டாக்ஸிக்” படத்தின் வெளியீட்டு தேதி மாற்றம் !

    யாஷ் நடித்துள்ள “டாக்ஸிக்” படத்தின் வெளியீட்டு தேதி மாற்றம் !

    சன் நெக்ஸ்ட் தளத்தில் தேவிஶ்ரீ பிரசாத் ! பிரமாண்டமாக தொடங்கிய “ஜாலி ஓ ஜிம்கானா” நிகழ்ச்சி !

    சன் நெக்ஸ்ட் தளத்தில் தேவிஶ்ரீ பிரசாத் ! பிரமாண்டமாக தொடங்கிய “ஜாலி ஓ ஜிம்கானா” நிகழ்ச்சி !

    டிஜிட்டல் வடிவில் புதுப்பிக்கப்பட்ட “மூன்றாம் பிறை” திரைப்படம் இன்றுமுதல் அமேசான் பிரைம் வீடியோவில் !

    டிஜிட்டல் வடிவில் புதுப்பிக்கப்பட்ட “மூன்றாம் பிறை” திரைப்படம் இன்றுமுதல் அமேசான் பிரைம் வீடியோவில் !

    பிரபல பாடகி சாருலதா மணி எழுதி, இசையமைத்து, பாடிய பாடலை வெளியிட்ட விஜய் சேதுபதி !

    பிரபல பாடகி சாருலதா மணி எழுதி, இசையமைத்து, பாடிய பாடலை வெளியிட்ட விஜய் சேதுபதி !

    “லவ் ஓ லவ்” படத்தின் படப்பிடிப்பு நிறைவு – பின்னணி பணிகள் தீவிரம் !

    “லவ் ஓ லவ்” படத்தின் படப்பிடிப்பு நிறைவு – பின்னணி பணிகள் தீவிரம் !

    அமெரிக்காவை வீழ்த்திய அனுபவங்களை வழங்க தயாராக உள்ளோம் – ஈரான் அமைச்சர்

    அமெரிக்காவை வீழ்த்திய அனுபவங்களை வழங்க தயாராக உள்ளோம் – ஈரான் அமைச்சர்

    குழந்தைகள் மனதில் தவறான எண்ணத்தை விதைத்த விஜய் ! 4 ஆம் தேதிக்குப் பிறகு ஷூட்டிங் செல்வார் !

    குழந்தைகள் மனதில் தவறான எண்ணத்தை விதைத்த விஜய் ! 4 ஆம் தேதிக்குப் பிறகு ஷூட்டிங் செல்வார் !

    பாஞ்சாபில் காலியாகும் ஆம் ஆத்மி கூடாரம் !

    பாஞ்சாபில் காலியாகும் ஆம் ஆத்மி கூடாரம் !

    ஊழல் குற்றச்சாட்டு, உட்கட்சி மோதல் ! தொடர் தோல்வியில் ஆம் ஆத்மி !

    ஊழல் குற்றச்சாட்டு, உட்கட்சி மோதல் ! தொடர் தோல்வியில் ஆம் ஆத்மி !

    கோலிவுட்டின் புது வரவான “கிருத்திக் மோகனின்” தொடர் வெற்றிகள் !

    கோலிவுட்டின் புது வரவான “கிருத்திக் மோகனின்” தொடர் வெற்றிகள் !