மருத்துவ கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைக்க கருத்துக் கேட்பு கூட்டம் ! அதிகாரிகளை ஓடவிட்ட கிராம மக்கள் !

Spread the love

மருத்துவ கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைக்க கருத்து கேட்பு கூட்டத்தில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதை அடுத்து அதிகாரிகள் கூட்டம் முடியும் முன்னரே கிளம்பி சென்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே முத்துவயல் கிராமத்தில் ராமநாதபுரம் மருத்துவர்கள் கூட்டமைப்பு அமைப்பின் சார்பில் பொது உயிரி மருத்துவ கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைக்க ( தனியார் ) இடம் தேர்வு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. மருத்துவ கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைப்பதற்கு முத்துவயல் கிராம மக்கள் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனை தொடர்ந்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் இன்று சத்திரகக்குடி தனியார் மகாலில் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜீலு,  பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் சரவண பெருமாள் ஆகியோர் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது. இதில் முத்துவயல் கிராம மக்கள், நாம் தமிழர் கட்சியினர், ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு குழுவினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டு மருத்துவ கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைப்பதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்.

மருத்துவ கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைந்தால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நோய் தொற்று ஏற்படும், நிலத்தடி நீர் மாசுபடும் உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை முன் வைத்தனர். தொடர்ந்து பல்வேறு கருத்துக்களை முன்வைத்து மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது எதிர்ப்பு குழுவினருக்கும், மருத்துவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை அடுத்து மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜீலு, பரமக்குடி கோட்டாட்சியர் சரவணபெருமாள் ஆகியோர் கருத்துக்கட்டு கூட்டத்தை புறக்கணித்து பாதியிலே கிளம்பி சென்றனர்.

Related Posts

இராமநாதபுரத்தில் தொகுதி அளவிலான விளையாட்டு போட்டிகள் !

Spread the love

Spread the loveஇராமநாதபுரத்தில் சட்டமன்ற தொகுதி அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியை மெரா யுவா பாரத் (MY Bharat), நேரு யுவா கேந்திரா (NYK), இராமநாதபுரம் மற்றும் இளையோர் மன்றங்கள்   இணைந்து Block Level Sports Meet 2025– ஐ,…

Read more

மகளிர் சுய உதவிக் குழுவினரை ஏமாற்றிய வங்கி அதிகாரிகள் ! சாலை மறியலால் பரபரப்பு..!

Spread the love

Spread the loveராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் மகளிர் சுய உதவிக் குழு, பெண்கள் நல அறக்கட்டளை சார்பில் பரமக்குடி சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்குக்கும் மேற்பட்ட பெண்கள் கடந்த 2020 – 2022 ஆம் ஆண்டு ஐம்பதாயிரம் ரூபாய் கடன்…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பார்க்க தவறிய செய்திகள்

“பூங்கா” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா !

“பூங்கா” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா !

“வீர தமிழச்சி” படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா !

“வீர தமிழச்சி” படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா !

34 ஆண்டுகளாக பொது மக்களின் கோரிக்கைகளை கண்டுகொள்ளாத அதிகாரிகள் !

34 ஆண்டுகளாக பொது மக்களின் கோரிக்கைகளை கண்டுகொள்ளாத அதிகாரிகள் !

இராமநாதபுரத்தில் தொகுதி அளவிலான விளையாட்டு போட்டிகள் !

இராமநாதபுரத்தில் தொகுதி அளவிலான விளையாட்டு போட்டிகள் !

“சுமதி வளவு” திரைப்படம் செப்டம்பர் 26 முதல் ஜீ-5 தளத்தில் வெளியீடு !

“சுமதி வளவு” திரைப்படம் செப்டம்பர் 26 முதல் ஜீ-5 தளத்தில் வெளியீடு !