மருத்துவ கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைக்க கருத்துக் கேட்பு கூட்டம் ! அதிகாரிகளை ஓடவிட்ட கிராம மக்கள் !

Spread the love

மருத்துவ கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைக்க கருத்து கேட்பு கூட்டத்தில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதை அடுத்து அதிகாரிகள் கூட்டம் முடியும் முன்னரே கிளம்பி சென்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே முத்துவயல் கிராமத்தில் ராமநாதபுரம் மருத்துவர்கள் கூட்டமைப்பு அமைப்பின் சார்பில் பொது உயிரி மருத்துவ கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைக்க ( தனியார் ) இடம் தேர்வு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. மருத்துவ கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைப்பதற்கு முத்துவயல் கிராம மக்கள் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனை தொடர்ந்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் இன்று சத்திரகக்குடி தனியார் மகாலில் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜீலு,  பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் சரவண பெருமாள் ஆகியோர் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது. இதில் முத்துவயல் கிராம மக்கள், நாம் தமிழர் கட்சியினர், ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு குழுவினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டு மருத்துவ கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைப்பதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்.

மருத்துவ கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைந்தால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நோய் தொற்று ஏற்படும், நிலத்தடி நீர் மாசுபடும் உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை முன் வைத்தனர். தொடர்ந்து பல்வேறு கருத்துக்களை முன்வைத்து மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது எதிர்ப்பு குழுவினருக்கும், மருத்துவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை அடுத்து மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜீலு, பரமக்குடி கோட்டாட்சியர் சரவணபெருமாள் ஆகியோர் கருத்துக்கட்டு கூட்டத்தை புறக்கணித்து பாதியிலே கிளம்பி சென்றனர்.

Related Posts

முதல்வர் வருகைக்கு எதிரான கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ரத்து ! சமாதான கூட்டத்தில் விவசாயிகள் முடிவு !

Spread the love

Spread the loveபசும்பொன் வருகை தரும் முதல்வருக்கு எதிரான விவசாயிகளின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்படுவதாக சமாதான கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜைக்கு அக்டோபர் 30ஆம் தேதி தமிழக முதல்வர்மு க ஸ்டாலின்…

Read more

தொடர்மழையால் களையிழந்த ஆட்டுச் சந்தை !

Spread the love

Spread the loveதீபாவளியை முன்னிட்டு பரமக்குடி வார சந்தையில் ஆடுகள் வரத்து அதிகமாக இருந்ததால் விலை அடியோடு சரிந்ததுடன் தொடர் மழை காரணமாக ஆட்டுச் சந்தை களை இழந்து காணப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வாரம்தோறும் வியாழக்கிழமை கால்நடை சந்தை நடைபெறும்.…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பார்க்க தவறிய செய்திகள்

“திரௌபதி_2” படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்வு !

“திரௌபதி_2” படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்வு !

“வா வாத்தியார்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“வா வாத்தியார்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

சிவகார்த்திகேயனின் “பராசக்தி” படத்தின் விமர்சனம்

சிவகார்த்திகேயனின் “பராசக்தி” படத்தின் விமர்சனம்

ஜீவாவின் நடிப்பில் உருவாகியுள்ள “தலைவர் தம்பி தலைமையில்” படத்தின் முன்னோட்டம் வெளியீடு !

ஜீவாவின் நடிப்பில் உருவாகியுள்ள “தலைவர் தம்பி தலைமையில்” படத்தின் முன்னோட்டம் வெளியீடு !

பிரபல கஞ்சா வியாபாரி கைது, குற்றவாளிகளின் கூடாரமான திமுக !

பிரபல கஞ்சா வியாபாரி கைது, குற்றவாளிகளின் கூடாரமான திமுக !