நூற்பாலையை திறக்கக் கோரி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் !

Spread the love

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே, கமுதக்குடி கிராமத்தில் மத்திய அரசுக்குச் சொந்தமான நூற்பாலை செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 1500க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வந்தனர். கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நூற்பாலை மூடப்பட்டது. இதனால் இங்கு பணிபுரிந்த தொழிலாளர்கள் வேலை இன்றி தவித்து வருகின்றனர். இந்த ஆலையில் பணிபுரிந்த தொழிலாளர்கள் அன்றாட அத்தியாவசிய செலவுகளுக்கு கூட பணம் இன்றி மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

கொரோனா பெருந்தொற்று காரணமாக மூடப்பட்ட நூற்பாலையை திறக்க வேண்டும், ஊழியர்களுக்கு முழுமையான சம்பளம் வழங்க வேண்டும், பணி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பணிக்கொடை வழங்க வேண்டும், ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊழியர்கள் நூற்பாலை வாயில் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த ஆறு ஆண்டுகளாக மூடப்பட்டுள்ள நூற்பாலையை திறக்க்கோரி 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு மத்திய மாநில அரசுகள் செவிசாய்த்து, மூடப்பட்ட நூற்பாலையை திறக்க வேண்டும் என அப்பகுதியினரும் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Posts

இராமநாதபுரத்தில் தொகுதி அளவிலான விளையாட்டு போட்டிகள் !

Spread the love

Spread the loveஇராமநாதபுரத்தில் சட்டமன்ற தொகுதி அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியை மெரா யுவா பாரத் (MY Bharat), நேரு யுவா கேந்திரா (NYK), இராமநாதபுரம் மற்றும் இளையோர் மன்றங்கள்   இணைந்து Block Level Sports Meet 2025– ஐ,…

Read more

மகளிர் சுய உதவிக் குழுவினரை ஏமாற்றிய வங்கி அதிகாரிகள் ! சாலை மறியலால் பரபரப்பு..!

Spread the love

Spread the loveராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் மகளிர் சுய உதவிக் குழு, பெண்கள் நல அறக்கட்டளை சார்பில் பரமக்குடி சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்குக்கும் மேற்பட்ட பெண்கள் கடந்த 2020 – 2022 ஆம் ஆண்டு ஐம்பதாயிரம் ரூபாய் கடன்…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பார்க்க தவறிய செய்திகள்

“பூங்கா” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா !

“பூங்கா” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா !

“வீர தமிழச்சி” படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா !

“வீர தமிழச்சி” படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா !

34 ஆண்டுகளாக பொது மக்களின் கோரிக்கைகளை கண்டுகொள்ளாத அதிகாரிகள் !

34 ஆண்டுகளாக பொது மக்களின் கோரிக்கைகளை கண்டுகொள்ளாத அதிகாரிகள் !

இராமநாதபுரத்தில் தொகுதி அளவிலான விளையாட்டு போட்டிகள் !

இராமநாதபுரத்தில் தொகுதி அளவிலான விளையாட்டு போட்டிகள் !

“சுமதி வளவு” திரைப்படம் செப்டம்பர் 26 முதல் ஜீ-5 தளத்தில் வெளியீடு !

“சுமதி வளவு” திரைப்படம் செப்டம்பர் 26 முதல் ஜீ-5 தளத்தில் வெளியீடு !