நூற்பாலையை திறக்கக் கோரி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் !

Spread the love

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே, கமுதக்குடி கிராமத்தில் மத்திய அரசுக்குச் சொந்தமான நூற்பாலை செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 1500க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வந்தனர். கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நூற்பாலை மூடப்பட்டது. இதனால் இங்கு பணிபுரிந்த தொழிலாளர்கள் வேலை இன்றி தவித்து வருகின்றனர். இந்த ஆலையில் பணிபுரிந்த தொழிலாளர்கள் அன்றாட அத்தியாவசிய செலவுகளுக்கு கூட பணம் இன்றி மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

கொரோனா பெருந்தொற்று காரணமாக மூடப்பட்ட நூற்பாலையை திறக்க வேண்டும், ஊழியர்களுக்கு முழுமையான சம்பளம் வழங்க வேண்டும், பணி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பணிக்கொடை வழங்க வேண்டும், ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊழியர்கள் நூற்பாலை வாயில் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த ஆறு ஆண்டுகளாக மூடப்பட்டுள்ள நூற்பாலையை திறக்க்கோரி 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு மத்திய மாநில அரசுகள் செவிசாய்த்து, மூடப்பட்ட நூற்பாலையை திறக்க வேண்டும் என அப்பகுதியினரும் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Posts

ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்க, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கோரிக்கை !

Spread the love

Spread the loveஆசிரியர்களுக்கு ஓய்வு பெற்றபின் வழங்கப்படும் பணி நீட்டிப்பை, மே 31 வரை நீட்டித்து வழங்க வேண்டும் என  தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் இராமநாதபுரம் மாவட்டத்தலைவரும்,…

Read more

ராமநாதபுரம் பேருந்து நிலையத்திற்கு “ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி” பெயர் சூட்ட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் !

Spread the love

Spread the loveராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்திற்கு மாமன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி பெயர் சூட்ட வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள மாமன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி சிலை முன்பு தென் தமிழர் கட்சியின் சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் ம.…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பார்க்க தவறிய செய்திகள்

“லவ் மேரேஜ்” படத்தின் முன்னோட்டம் வெளியீடு !

“லவ் மேரேஜ்” படத்தின் முன்னோட்டம் வெளியீடு !

நூற்பாலையை திறக்கக் கோரி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் !

நூற்பாலையை திறக்கக் கோரி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் !

ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்க, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கோரிக்கை !

ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்க, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கோரிக்கை !

ராமநாதபுரம் பேருந்து நிலையத்திற்கு “ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி” பெயர் சூட்ட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் !

ராமநாதபுரம் பேருந்து நிலையத்திற்கு “ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி” பெயர் சூட்ட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் !

“மெட்ராஸ் மேட்னி” படக்குழுவினரின் நன்றி அறிவிப்பு விழா !

“மெட்ராஸ் மேட்னி” படக்குழுவினரின் நன்றி அறிவிப்பு விழா !