10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில், மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்ற மாணவிக்கு தங்க நாணயம் பரிசு !

Spread the love

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் இரண்டாம் மதிப்பெண் பெற்ற மாணவிக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் 16 மே ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பார்த்திபனூரில் உள்ள சென்மேரிஸ் மெட்ரிக் பள்ளியில் பயின்ற நூர்ஜகான் என்ற மாணவி 498 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாம் அளவிலும் மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெற்றும் சாதனை படைத்துள்ளார்.

இவரது பெற்றோர் பலசரக்கு கடை நடத்தி வருகின்றனர். மாணவியின் சொந்த ஊர் பார்த்திபனூர் அருகே பரளை கிராமமாகும். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கிராமப்புறத்தைச் சேர்ந்த மாணவி மாநில அளவில் இரண்டாம் மதிப்பெண் பெற்று பரளை கிராமத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். இதனை அடுத்து மாநில அளவில் இரண்டாம் மதிப்பெண் பெற்ற மாணவி நூர் ஜகானுக்கு பரளை ஜமாத் சார்பில் பொன்னாடை அணிவித்து தங்க நாணயம் பரிசாக வழங்கி கௌரவிக்கப்பட்டது.

அதேபோல் அந்த மாணவியின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு பொன்னாடை அணிவிக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 498 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த கிராமபுறத்தை சேர்ந்த மாணவிக்கு தங்க நாணயம் வழங்கி பாராட்டிய சம்பவம் மகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts

இராமநாதபுரத்தில் தொகுதி அளவிலான விளையாட்டு போட்டிகள் !

Spread the love

Spread the loveஇராமநாதபுரத்தில் சட்டமன்ற தொகுதி அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியை மெரா யுவா பாரத் (MY Bharat), நேரு யுவா கேந்திரா (NYK), இராமநாதபுரம் மற்றும் இளையோர் மன்றங்கள்   இணைந்து Block Level Sports Meet 2025– ஐ,…

Read more

மகளிர் சுய உதவிக் குழுவினரை ஏமாற்றிய வங்கி அதிகாரிகள் ! சாலை மறியலால் பரபரப்பு..!

Spread the love

Spread the loveராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் மகளிர் சுய உதவிக் குழு, பெண்கள் நல அறக்கட்டளை சார்பில் பரமக்குடி சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்குக்கும் மேற்பட்ட பெண்கள் கடந்த 2020 – 2022 ஆம் ஆண்டு ஐம்பதாயிரம் ரூபாய் கடன்…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பார்க்க தவறிய செய்திகள்

“பூங்கா” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா !

“பூங்கா” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா !

“வீர தமிழச்சி” படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா !

“வீர தமிழச்சி” படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா !

34 ஆண்டுகளாக பொது மக்களின் கோரிக்கைகளை கண்டுகொள்ளாத அதிகாரிகள் !

34 ஆண்டுகளாக பொது மக்களின் கோரிக்கைகளை கண்டுகொள்ளாத அதிகாரிகள் !

இராமநாதபுரத்தில் தொகுதி அளவிலான விளையாட்டு போட்டிகள் !

இராமநாதபுரத்தில் தொகுதி அளவிலான விளையாட்டு போட்டிகள் !

“சுமதி வளவு” திரைப்படம் செப்டம்பர் 26 முதல் ஜீ-5 தளத்தில் வெளியீடு !

“சுமதி வளவு” திரைப்படம் செப்டம்பர் 26 முதல் ஜீ-5 தளத்தில் வெளியீடு !