நெடுஞ்சாலையில் கடைக்குள் புகுந்த லாரி ! பல்லடம் அருகே பதட்டத்தில் வியாபாரிகள் ! 

Spread the love

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த காரணம்பேட்டை, நால் ரோடு சிக்னல் போக்குவரத்து நிறைந்த பகுதியாகும். கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இப்பகுதியில் சிக்னலை ஒட்டி அதிகளவில் சாலை ஓர தள்ளுவண்டி கடைகள் மற்றும் பேருந்து நிருத்தம், காம்ப்ளக்ஸ் கடைகள் உள்ளது.

இந்நிலையில் கோவையில் இருந்து பல்லடம் நோக்கி கேரள பதிவெண் கொண்ட லாரி வந்துகொண்டிருந்தது. லாரி காரணம்பேட்டை சிக்னலை வேகமாக கடந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரமுள்ள தள்ளுவண்டி கடைகள் மீது மோதிவிட்டு நிற்காமல், அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த மாருதி வேன், இரு சக்கரவாகனங்களை துவசம் செய்துவிட்டு அங்கிருந்த காம்ப்ளெக்ஸ் கட்டிட கடைக்குள் புகுந்துள்ளது. இந்த விபத்தில் ஒருவர் பலியானது டன், மூன்று பேர் காயமடைந்துள்ளனர். இதனிடையே லாரி மோதிய வேகத்தில் அங்கிருந்த மின்சார இரும்பு கம்பம் சேதமடைந்துள்ளது.

இதனிடையே விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த பல்லடம் டி.எஸ்.பி தலைமையிலான காவல்துறையினர், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் உயிரிழந்த நபரின் உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் பேருந்து நிறுத்தம் அருகிலேயே நடந்த விபத்தினால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதனிடையே சிக்னல் முடிவதற்குள் அவசரப்பட்டு வேகமாக இயக்கியதால் லாரி கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டதா ? அல்லது ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இயக்கினாரா ? என்பது குறித்து போலீசாரின் விசாரணையின் முடிவில் தான் தெரியவரும். தேசிய நெடுஞ்சாலையில் நடந்த இந்த விபத்தினால் அப்பகுதியில் மின் தடை ஏற்பட்டுள்ளது.

Related Posts

பொன்முடியின் ஆபாச பேச்சு ! சமூக ஆர்வலர் புகார்.. அமைச்சர் பதவியில் நீடிப்பாரா பொன்முடி !

Spread the love

Spread the loveகடந்த 06.04.2025 ஞாயிறு அன்று மாலை சென்னை அன்பகத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் தமிழ்நாடு அரசின் வனம் மற்றும் கதர் துறையின் அமைச்சர் க. பொன்முடி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அமைச்சர் சைவமா? வைணவமா?…

Read more

கூலி வேலை செய்யும் விசைத்தறியாளர்களின் கோரிக்கைகளை  நிறைவேற்ற வேண்டும். அண்ணாமலை வலியுறுத்தல் ! 

Spread the love

Spread the loveகோவை, திருப்பூர் மாவட்டங்களில், விசைத்தறிகள் மூலம், சுமார் ஏழு லட்சம் மக்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறையும், ஜவுளி உற்பத்தியாளர்கள், நெசவாளர்கள், கோவை திருப்பூர் மாவட்ட ஆட்சியாளர்கள் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி, விசைத்தறி…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பார்க்க தவறிய செய்திகள்

பொன்முடியின் ஆபாச பேச்சு ! சமூக ஆர்வலர் புகார்.. அமைச்சர் பதவியில் நீடிப்பாரா பொன்முடி !

பொன்முடியின் ஆபாச பேச்சு ! சமூக ஆர்வலர் புகார்.. அமைச்சர் பதவியில் நீடிப்பாரா பொன்முடி !

பாஜக, அதிமுக கூட்டணிக்கு வாழ்த்து தெரிவித்த துணை முதலமைச்சர் !

பாஜக, அதிமுக கூட்டணிக்கு வாழ்த்து தெரிவித்த துணை முதலமைச்சர் !

பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு அமித்ஷா வாழ்த்து !

பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு அமித்ஷா வாழ்த்து !

மாநகராட்சியின் புதிய திட்டம் ! நொந்துபோன அரசுப்பள்ளி ஆசிரியர்கள் !

மாநகராட்சியின் புதிய திட்டம் ! நொந்துபோன அரசுப்பள்ளி ஆசிரியர்கள் !

63 நாயன்மார்கள் திருவீதி உலாவில், சிவாச்சாரியார்கள் தகராறு !

63 நாயன்மார்கள் திருவீதி உலாவில், சிவாச்சாரியார்கள் தகராறு !