தமிழ் சினிமாவில் அமைதியான அலையாக நுழைந்து, இப்போது அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறார் ஒரு இளம் நாயகன். அவர்தான் க்ரித்திக் மோகன்! கடந்த வாரம் வெளியான ‘பிரேக்பாஸ்ட்’ திரைப்படம், இவரை ஒரு மெச்சூர்ட் ஹீரோவாக அடையாளம் காட்டியிருக்கிறது.

ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போதே, விஜய் வசந்தின் ‘அச்சமின்றி’ படத்தில் ஒரு சிறு வேடத்தில் தலைகாட்டியவர். அப்போது வந்த வாய்ப்புகளை ‘படிப்பு தான் முக்கியம்’ எனத் தள்ளி வைத்தவர், இன்று திரையில் மின்னிக் கொண்டிருக்கிறார்.
கவனிக்க வைத்த கதாபாத்திரங்கள் :
சுப்புராம் இயக்கத்தில், வெளியாகி கவனத்தை ஈர்த்த அஞ்சாமை திரைப்படத்தில் நீட் தேர்வால் பாதிக்கப்படும் பிளஸ் டூ மாணவனாக / விதார்த் மகனாக நடித்து ஒட்டுமொத்தத் தமிழகத்தின் கண்களையும் கலங்க வைத்தார்.

இப்போது காந்தி கிருஷ்ணா இயக்கத்தில், காதல் மனைவியிடம் அன்புப் போராட்டம் நடத்தும் கணவனாக நடித்து, காதல் காட்சிகளிலும், எமோஷனல் சீன்களிலும் ஸ்கோர் செய்திருக்கிறார் !
அடுத்து, ஓசூர் அருகே நடந்த ஒரு அதிர்ச்சிகரமான உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள படத்தில், வெயிட்டான கதாபாத்திரத்தில் நடித்து முடித்துவிட்டார்.

இது தவிர, மேலும் இரண்டு முக்கிய படங்களில் கமிட் ஆகி கோலிவுட்டில் ஒரு ரவுண்டு வரத் தயாராகிவிட்டார்.
துடிப்பான நடிப்பு, எதார்த்தமான முகம் – தமிழ் சினிமாவில் ஒரு புதுமையான ஹீரோவாக வலம் வருவார்..



































































































