
திமுக மக்களவை குழு தலைவரும், துணை பொதுச் செயலாளருமான கனிமொழி, மாநில உரிமையை பறிகொடுத்த எடப்பாடிபழனிச்சாமியை, தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் மறக்கவும் மாட்டார்கள், மன்னிக்கவும் மாட்டார்கள் என குறிப்பிட்டுள்ளார். இதற்கு பதிலளிக்கும் விதமாக வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன், கனிமொழி அவர்களே, திமுக கடந்த 18 வருடமாக மத்தியில் ஆட்சியில் இருந்து போது, மாநில சுயாட்சி, இந்தி எதிர்ப்பு, ஈழத் தமிழர், காவேரி, முல்லை பெரியாறு போன்ற 18 நதி நீர் சிக்கல்கள், நெய்வேலி, சேலம் இரும்பு ஆலை, ஊட்டி பிலிம் தொழிற்சாலை என தமிழக பல பிரச்சணைகளுக்கு குரல் கொடுக்காமல் வாய் மூடி மௌனியாக இருந்தீர்கள்.

மத்திய ஆட்சியில் வளமான துறைகளில் மந்திரிகளாக நீங்கதான் இருந்தீர்கள்.. கலைஞர் மகள் என்ற வகையில் 2004 இல் எம்பி ஆன ராஜா வீட்டு கண்ணுக்குட்டிகள் நீங்க… இன்று பெரிய தோரணைகள், போஸ்டர் என உங்களுக்கு ஏற்பட உங்கள் தந்தை செய்த காரியம், அவ்வளவுதான். திமுகவில 50-60 ஆண்டுகள் உழைத்தும் பலர் வெளியே உள்ளார்கள். மன சாட்சிக்கு இந்த உண்மை தெரியும் என கே.எஸ். ராதாகிருஷ்ணன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.