பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி பணியிடமாற்றம் !

Spread the love

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மே 13ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என கோவை மகளிர் நீதிமன்றம் அறிவித்த சில நிமிடங்களிலேயே அந்த நீதிபதி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பொள்ளாச்சி பாலியல் குற்றம் தொடர்பாக கடந்த 2019 ஆம் ஆண்டு 8 பெண்கள் அளித்த புகாரின் பேரில், 13 பிரிவுகளில் சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பொள்ளாச்சியை சேர்ந்த திருநாவுக்கரசு, சபரி ராஜன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன், கெரே பால், பாபு, அருளானந்தம், அருண்குமார் ஆகிய ஒன்பது பேர் சிறையில் உள்ளனர். மூன்று முறை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு ஆறு ஆண்டுகள் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது.

கடந்த வாரத்திலிருந்து தினசரி விசாரணை நடைபெற்று வந்தது. அரசு தரப்பு உள்ளிட்ட இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த பெற்ற நிலையில், மே 13ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என கோவை மகளிர் நீதிமன்றம் அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களுக்குள், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நந்தினி தேவி உள்ளிட்ட மாவட்ட நீதிபதிகள் 77 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். எனினும் மே 30ஆம் தேதி வரை அவர் கோவை மகளிர் நீதிமன்றத்திலேயே பணியில் இருப்பார் என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Posts

34 ஆண்டுகளாக பொது மக்களின் கோரிக்கைகளை கண்டுகொள்ளாத அதிகாரிகள் !

Spread the love

Spread the loveகோயம்புத்தூர் மாவட்டம், கோவை வடக்கு வட்டாரத்தில் உள்ள விளாங்குறிச்சி கிராமத்தில், முருகன் நகர், விநாயகபுரம், சங்கரா நகர் ஆகிய இடங்களில் வசிக்கும் பொதுமக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 34 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாத தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்துள்ளனர்.…

Read more

இந்திய ராணுவத்திற்கு ஆதரவைத் தெரிவிக்கும் வகையில், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் பேரணி !

Spread the love

Spread the loveஇந்தியா – பாகிஸ்தான் எல்லையில் போர் நடைபெற்று வருவதைத் தொடர்ந்து, பொதுமக்கள் வசிக்கும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது. இந்த துப்பாக்கி சண்டையில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். எல்லையில் பாகிஸ்தான் ராணுவ…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பார்க்க தவறிய செய்திகள்

“பூங்கா” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா !

“பூங்கா” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா !

“வீர தமிழச்சி” படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா !

“வீர தமிழச்சி” படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா !

34 ஆண்டுகளாக பொது மக்களின் கோரிக்கைகளை கண்டுகொள்ளாத அதிகாரிகள் !

34 ஆண்டுகளாக பொது மக்களின் கோரிக்கைகளை கண்டுகொள்ளாத அதிகாரிகள் !

இராமநாதபுரத்தில் தொகுதி அளவிலான விளையாட்டு போட்டிகள் !

இராமநாதபுரத்தில் தொகுதி அளவிலான விளையாட்டு போட்டிகள் !

“சுமதி வளவு” திரைப்படம் செப்டம்பர் 26 முதல் ஜீ-5 தளத்தில் வெளியீடு !

“சுமதி வளவு” திரைப்படம் செப்டம்பர் 26 முதல் ஜீ-5 தளத்தில் வெளியீடு !