அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட வேளாண்மை விரிவாக்க மையம் ! விவசாயிகளின் கால்களை பதம் பார்க்கும் அதிசயம் !

Spread the love

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பஞ்சாயத்து யூனியன் அலுவலக வளாகத்தில் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்தபோது 2017 ஆம் ஆண்டு ரூபாய் ஒன்றரை கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம் இரண்டு தங்களுடன், அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டது.

இந்நிலையில்  அலுவலக நுழைவாயில் பகுதியில் உள்ள தரையில் பதிக்கப்பட்டிருந்த டைல்ஸ்கள் பெயர்ந்து சேதமடைந்து காணப்படுவதால் அலுவலகத்திற்க்கு வரும் விவசாயிகள் மற்றும் ஊழியர்களின் கால்களில் அடிக்கடி காயம் ஏற்படுகிறது. அதேபோல் கட்டிடத்தின் தூண்கள் மற்றும் சுற்றுச்சூவரில் சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்து கம்பிகள் மட்டும் உள்ளதால் அச்சத்துடன் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

மேலும் அலுவலக நுழைவாயில், உதவி வேளாண் அலுவலர் அறை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் டைல்ஸ் கற்கள் பெயர்ந்து சேதம் அடைந்துள்ளது. டைல்ஸ் கற்கள் பெயர்ந்து உடைந்து காணப்படுவதுடன், கழிப்பறைகளின் கதவுகள் உடைந்து சேதம் அடைந்து பயன்பாடுன்றி உள்ளது. சேதம் அடைந்த டைல்ஸ் கற்களை மாற்றி தரை தளத்தை சீரமைக்க கோரி வேளாண் துறை அதிகாரிகள் பலமுறை வலியுறுத்தியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அதிமுக ஆட்சியில் தரமற்ற முறையில் கட்டப்பட்டதால் குறுகிய காலத்தில் தரையில் பதிக்கப்பட்ட டைல்ஸ்கள் பெயர்ந்து விட்டதாக கூறப்படுகிறது. பரமக்குடி வேளாண்மை விரிவாக்கம் மையத்தில் டைல்ஸ்கள் சேதம் அடைந்து உள்ளதை சீரமைக்க வேண்டுமென வேளாண்மைத்துறை அதிகாரிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Posts

முதல்வர் வருகைக்கு எதிரான கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ரத்து ! சமாதான கூட்டத்தில் விவசாயிகள் முடிவு !

Spread the love

Spread the loveபசும்பொன் வருகை தரும் முதல்வருக்கு எதிரான விவசாயிகளின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்படுவதாக சமாதான கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜைக்கு அக்டோபர் 30ஆம் தேதி தமிழக முதல்வர்மு க ஸ்டாலின்…

Read more

தொடர்மழையால் களையிழந்த ஆட்டுச் சந்தை !

Spread the love

Spread the loveதீபாவளியை முன்னிட்டு பரமக்குடி வார சந்தையில் ஆடுகள் வரத்து அதிகமாக இருந்ததால் விலை அடியோடு சரிந்ததுடன் தொடர் மழை காரணமாக ஆட்டுச் சந்தை களை இழந்து காணப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வாரம்தோறும் வியாழக்கிழமை கால்நடை சந்தை நடைபெறும்.…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பார்க்க தவறிய செய்திகள்

“திரௌபதி_2” படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்வு !

“திரௌபதி_2” படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்வு !

“வா வாத்தியார்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“வா வாத்தியார்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

சிவகார்த்திகேயனின் “பராசக்தி” படத்தின் விமர்சனம்

சிவகார்த்திகேயனின் “பராசக்தி” படத்தின் விமர்சனம்

ஜீவாவின் நடிப்பில் உருவாகியுள்ள “தலைவர் தம்பி தலைமையில்” படத்தின் முன்னோட்டம் வெளியீடு !

ஜீவாவின் நடிப்பில் உருவாகியுள்ள “தலைவர் தம்பி தலைமையில்” படத்தின் முன்னோட்டம் வெளியீடு !

பிரபல கஞ்சா வியாபாரி கைது, குற்றவாளிகளின் கூடாரமான திமுக !

பிரபல கஞ்சா வியாபாரி கைது, குற்றவாளிகளின் கூடாரமான திமுக !