
திண்டுக்கல் அருகே திருமலைக்கேணி பகுதியில் அனுமதி இல்லாமல் பாறைகளை உடைத்து கற்களை கடத்தி வருவதாக வந்த தகவலையடுத்து, வருவாய்த்துறை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக கற்களை ஏற்றி வந்த இரண்டு டிராக்டர்களை நிறுத்தியுள்ளனர். அதிகாரிகளை பார்த்ததும் டிராக்டர்களை ஓட்டி வந்த டிரைவர்கள் இறங்கி தப்பி ஓடி விட்டயுள்ளனர்.
இதனால் சந்தேகமடைந்த வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில், அரசுக்கு சொந்தமான இடத்தில் அனுமதியின்றி பாறை கற்களை வெட்டி எடுத்து கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. அதனையடுத்து உடனடியாக இரண்டு டிராக்டர்களையும் பறிமுதல் செய்து வடமதுரை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இதுகுறித்து வடமதுரை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து டிராக்டர்களை ஓட்டி வந்த வெங்கடாஜலம், பாலமுருகன் ஆகியோரை தேடி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் இதுபோன்ற பல்வேறு இடங்களில் அனுமதி இல்லாமல் பாறைகளை உடைத்து கற்களை கடத்தி விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கு அந்த பகுதியில் பணியாற்றும் அரசு அதிகாரிகளும் உடந்ததையாக இருப்பதோடு, கடத்தலுக்கு பாதுகாப்புப் அரணாக செயல்பாட்டு வருவதாக அப்பகுதியினர் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.
அரசுக்கு சொந்தமான இடங்களில் இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து கனிம வளங்களை பாதுகாக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.