முந்திரி மோசடி வழக்கில் ஜாமீனில் வந்தவர் மீண்டும் கைது

Spread the love

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகிலுள்ள வாளாம்பட்டை அடுத்த தொப்பயாங்குளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் கனகராஜ்(39). இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக முத்துலட்சுமி இண்டர்நேசனல் டிரேட் என்கிற பெயரில் விவசாயிகளிடம் முந்திரியை நேரடியாக கொள்முதல் செய்து மொத்த முந்திரி வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கோவையை சேர்ந்த ஜெமிஷா,அருண், சம்சுதீன், செல்வல் உதையா ஆகியோர் கனகராஜை தொடர்புகொண்டு தாங்கள் பல்லடத்தை அடுத்த காரணம்பேட்டையில் அக்ரிகல்சர் ஜெம் கெயின் நிறுவனம் நடத்திவருவதாகவும் மொத்தமாக மூன்று டன் முந்திரி தேவைப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

பின்னர் முதல்கட்டமாக 9 லட்சத்து 21 ஆயிரத்து 375 ரூபாய் மதிப்புள்ள ஒன்னரை டன் முந்திரியை கனகராஜ் நேரடியாக சென்று சப்ளை செய்துள்ளார். அதற்குண்டான தொகையை வங்கியில் செலுத்திவிடுவதாக ஜெமிஷா தெரிவித்துள்ளார். பின்னர் பல நாட்கள் கடத்தி வந்த நிலையில், காசோலை வழங்கியதாகவும், அதுவும் பணம் இன்றி திரும்பி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த கனகராஜ் மோசடி செய்ததை அறிந்து பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு ஜெமிஷா மட்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் கண்டிசன் நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பல்லடம் நீதிமன்றத்தில் பெயில் பெற்ற ஜெமீஷா அதன் பின்னர் சுமார் 3 நாட்கள் மட்டுமே பல்லடம் காவல் நிலையத்தில் கண்டிசன் பெயில் கையெழுத்திட்டுவிட்டு கடந்த 6 மாதங்களுக்கு மேலாக தலைமறைவாக இருந்து வந்துள்ளார்.

இதனையடுத்து மீண்டும் வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவான ஜெமிஷாவை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் ஜெமிஷாவை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Related Posts

    பல்லடம் நகராட்சி நிர்வாக சீர்கேட்டை கண்டித்து, தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் அறிவித்த பொதுமக்கள் !

    Spread the love

    Spread the loveதிருப்பூர் மாவட்டம், பல்லடம் நாகராட்சிக்குட்பட்ட பகுதியில் 18 வார்டுகள் அமைந்துள்ளது. இந்நிலையில் 10 வது வார்டு பகுதிக்குட்பட்ட ஜே.கே.ஜே காலனியில் சுமார் நூற்றுக்கும் அதிகமான வீடுகள் உள்ளன. மேலும் இப்பகுதியில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பே சாக்கடை கழிவு…

    Read more

    கறிக்கோழி உற்பத்தியாளர்கள் புகார் ! விவசாயிகள் சங்கத் தலைவர் கைது !

    Spread the love

    Spread the loveகறிக்கோழி உற்பத்தியாளர்கள் கூலி உயர்வு கேட்டு கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்கள் மட்டுமல்லாது தமிழக முழுவதும் பல இடங்களில் கடந்த சில நாட்களாக, கறிக்கோழி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், தனியார்…

    Read more

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    பார்க்க தவறிய செய்திகள்

    இளைய தலைமுறையினர் விரும்பும் ஹர்ஷவர்தனின் “மாயம் நீயடி” மியூசிக் ஆல்பம்

    இளைய தலைமுறையினர் விரும்பும் ஹர்ஷவர்தனின் “மாயம் நீயடி” மியூசிக் ஆல்பம்

    “ஜமா” புகழ் பாரி இளவழகன் நடித்துள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு !

    “ஜமா” புகழ் பாரி இளவழகன் நடித்துள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு !

    தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில், ஏகமனதாக விடியல் ராஜூ தேர்வு  !

    தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில், ஏகமனதாக விடியல் ராஜூ தேர்வு  !

    “அந்தோனி” படத்தின் இசை & ட்ரெய்லர் வெளியீட்டு விழா !

    “அந்தோனி” படத்தின் இசை & ட்ரெய்லர் வெளியீட்டு விழா !

    ஹாரர் & த்ரில்லர் படமாக உருவாகியுள்ள “99/66” திரைப்படம் மார்ச் 6 ஆம் தேதி வெளியீடு !

    ஹாரர் & த்ரில்லர் படமாக உருவாகியுள்ள “99/66” திரைப்படம் மார்ச் 6 ஆம் தேதி வெளியீடு !