விவசாயத்தை அழிக்கும் காட்டு பன்றிகள் ! கருவேல மரங்களால் நிலத்தடி நீர் பாதிப்பு ! விவசாயிகள் குற்றச்சாட்டு

Spread the love

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதந்தோறும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் முதன்முறையாக பரமக்குடி வருவாய் கோட்ட அளவில் விவசாயிகள் குறைதீர் கூட்டம், பரமக்குடி சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. பரமக்குடி சார் ஆட்சியர் அபிலாஷா கபூர் முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பரமக்குடி வருவாய் உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளான பரமக்குடி, முதுகுளத்தூர், கமுதி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்தனர்.

அப்போது பரமக்குடி, கமுதி உள்ளிட்ட பகுதிகளில் காட்டு பன்றிகளால் விவசாயம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் கூட்டம் கூட்டமாக வரும் காட்டுப்பன்றிகள் கரும்பு, பருத்தி உள்ளிட்டவற்றை சேதப்படுத்துகிறது. இதனால் அதிகளவில் சேதம் ஏற்படுகிறது. காட்டு பன்றிகளை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெரும்பாலான விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். விளை நிலங்களில் உலாவரும் காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தொடர்ந்து ஒவ்வொரு கிராமங்களிலும் காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்துவது குறித்து விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட உள்ளது என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கண்மாய்களில் அதிகளவில் கருவேல மரங்கள் நிறைந்து காணப்படுவதால், நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுகிறது, உடனடியாக கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சார் ஆட்சியர் தெரிவித்தார். பரமக்குடி வருவாய் கோட்டளவில் நடைபெற்ற விவசாயிகள் கூட்டத்தில் பொதுப்பணித்துறை, வேளாண்மை துறை, வனத்துறை, வருவாய்த்துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதில் அளித்தனர்.

Related Posts

நூற்பாலையை திறக்கக் கோரி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் !

Spread the love

Spread the loveராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே, கமுதக்குடி கிராமத்தில் மத்திய அரசுக்குச் சொந்தமான நூற்பாலை செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 1500க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வந்தனர். கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக,…

Read more

ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்க, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கோரிக்கை !

Spread the love

Spread the loveஆசிரியர்களுக்கு ஓய்வு பெற்றபின் வழங்கப்படும் பணி நீட்டிப்பை, மே 31 வரை நீட்டித்து வழங்க வேண்டும் என  தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் இராமநாதபுரம் மாவட்டத்தலைவரும்,…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பார்க்க தவறிய செய்திகள்

“லவ் மேரேஜ்” படத்தின் முன்னோட்டம் வெளியீடு !

“லவ் மேரேஜ்” படத்தின் முன்னோட்டம் வெளியீடு !

நூற்பாலையை திறக்கக் கோரி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் !

நூற்பாலையை திறக்கக் கோரி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் !

ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்க, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கோரிக்கை !

ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்க, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கோரிக்கை !

ராமநாதபுரம் பேருந்து நிலையத்திற்கு “ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி” பெயர் சூட்ட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் !

ராமநாதபுரம் பேருந்து நிலையத்திற்கு “ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி” பெயர் சூட்ட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் !

“மெட்ராஸ் மேட்னி” படக்குழுவினரின் நன்றி அறிவிப்பு விழா !

“மெட்ராஸ் மேட்னி” படக்குழுவினரின் நன்றி அறிவிப்பு விழா !