
பல்லடம் நகர பாரதீய ஜனதா கட்சியின் சார்பாக பல்லடத்திலிருந்து செல்லும் மாநில நெடுஞ்சாலைகள் வழியாக புதிய வழித்தடத்தில் அரசு புறநகர் பேருந்துகளை இயக்க வலியுறுத்தி பாரதிய ஜனதா கட்சியின் பல்லடம் நகரத் தலைவர் பன்னீர் செல்வகுமார் தலைமையில், பல்லடம் அரசு போக்குவரத்துக் கழக கிளை மேலாளரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கப்பட்டது.

மனுவைப் பெற்றுக் கொண்ட கிளை மேலாளர் உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் பல்லடத்தில் இருந்து செட்டிபாளையம் வழியாக – போத்தனூர் ரயில் நிலையம் – உக்கடம் பேருந்து நிலையம் – காந்திபுரம் பேருந்து நிலையம் வரையிலும்ம், பல்லடத்தில் இருந்து மங்கலம் – அவிநாசி – சேவூர் – புளியம்பட்டி வழியாக சத்தியமங்கலம் வரையிலும் என இரண்டு புதிய வழித்தடங்களில் அரசு புறநகர் பேருந்துகளை இயக்க வேண்டும் என கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்போது ஏராளமான பாஜக நகர நிர்வாகிகள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.