“ஒன்னரை கோடி செலவு பண்ணித்தான் தலைவரானேன்” பேரூராட்சி தலைவரின் வில்லங்க ஆடியோ

Spread the love

திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் பேரூராட்சியில் சுமார் 30 ஆயிரம் பேர் வசித்துவரும் நிலையில் மொத்தம் உள்ள 15 வார்டுகளில் தி.மு.க – 6, அ.தி.மு.க – 4, காங்கிரஸ் -2, சுயேட்சை – 3 இடத்திலும் வெற்றி பெற்றிருந்த நிலையில் பேரூராட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் விநாயகா பழனிச்சாமி, தி.மு.க.சார்பில் வேலுச்சாமி போட்டியிட்டனர். இதில் பழனிச்சாமி 8 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். வேலுச்சாமி 6 வாக்குகள் பெற்றார். பின்னர் சுயேச்சை வேட்பாளரான விநாயகா பழனிச்சாமி திமுக வில் இணைந்தார்.

இந்நிலையில் விநாயகா பழனிச்சாமி வார்டு உறுப்பினரிடம் பேசிய வில்லங்க ஆடியோ தற்போது வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 13 வது வார்டு உறுப்பினர் பெரியசாமியுடன் பேசுவதாக கூறப்படும் ஆடியோவில் ஏன் மாப்ள நேத்து ஏன் அப்படி பேசினீங்க, என்ன பழக்கம் இது என குறிப்பிட்டு பேசிவிட்டு பின்னர் 50 ஆயிரம் தான் வாங்கியிருக்கேன், 75 ஆயிரமெல்லாம் வாங்கவில்லை எனவும், எந்த கோயிலில் வந்து சத்தியம் பன்ன தயார் என கூறுகிறார். பின்னர் வாங்கிய பணத்தில் 25 ஆயிரத்தை பஞ்சாயத்து ஈ.ஓ. வுக்கு கொடுத்துவிட்டதாகவும் பழனிச்சாமி வாக்குமூலம் அளித்துள்ளார்.

கவுன்சிலர் பெரியசாமி

மேலும் இதை விட கொடுமை ஒன்னரை கோடி செலவு செய்து தான் தலைவர் பதவிக்கு வந்ததாகவும் உண்மையை எடுத்துரைத்தார். மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜியுடனும், மு.பெ. சாமிநாதனுடன் நெருக்கமாக இருப்பதால் கம்முன்னு இருக்கானுங்கனும், கட்சிக்குள்ள தன்னை ஒன்னும் செய்யமுடியாது எனவும் நீங்க வேலைய பாருங்க மாப்பிள, ரெண்டு காசு சம்பாதிக்க பாருங்க, நாம ஒன்னும் திருடப்போறதில்ல, நாம வாங்கரதுக்கு என்ன? ஆளுக்கு தகுந்த மாதிரி வாங்கலாம் என அதிர்ச்சியூட்டும் வகையில் ஆடியோவில் பேசியுள்ளார்.

மேலும் குறிப்பிட்ட சமூகத்தை பற்றி பேசும்போது குவாட்டர் வாங்கி கொடுத்தால் போதும் எனவும் தரம் தாழ்ந்து பேசியுள்ளார். இந்த ஆடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts

பல்லடம் நகராட்சி நிர்வாக சீர்கேட்டை கண்டித்து, தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் அறிவித்த பொதுமக்கள் !

Spread the love

Spread the loveதிருப்பூர் மாவட்டம், பல்லடம் நாகராட்சிக்குட்பட்ட பகுதியில் 18 வார்டுகள் அமைந்துள்ளது. இந்நிலையில் 10 வது வார்டு பகுதிக்குட்பட்ட ஜே.கே.ஜே காலனியில் சுமார் நூற்றுக்கும் அதிகமான வீடுகள் உள்ளன. மேலும் இப்பகுதியில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பே சாக்கடை கழிவு…

Read more

கறிக்கோழி உற்பத்தியாளர்கள் புகார் ! விவசாயிகள் சங்கத் தலைவர் கைது !

Spread the love

Spread the loveகறிக்கோழி உற்பத்தியாளர்கள் கூலி உயர்வு கேட்டு கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்கள் மட்டுமல்லாது தமிழக முழுவதும் பல இடங்களில் கடந்த சில நாட்களாக, கறிக்கோழி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், தனியார்…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பார்க்க தவறிய செய்திகள்

இளைய தலைமுறையினர் விரும்பும் ஹர்ஷவர்தனின் “மாயம் நீயடி” மியூசிக் ஆல்பம்

இளைய தலைமுறையினர் விரும்பும் ஹர்ஷவர்தனின் “மாயம் நீயடி” மியூசிக் ஆல்பம்

“ஜமா” புகழ் பாரி இளவழகன் நடித்துள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு !

“ஜமா” புகழ் பாரி இளவழகன் நடித்துள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு !

தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில், ஏகமனதாக விடியல் ராஜூ தேர்வு  !

தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில், ஏகமனதாக விடியல் ராஜூ தேர்வு  !

“அந்தோனி” படத்தின் இசை & ட்ரெய்லர் வெளியீட்டு விழா !

“அந்தோனி” படத்தின் இசை & ட்ரெய்லர் வெளியீட்டு விழா !

ஹாரர் & த்ரில்லர் படமாக உருவாகியுள்ள “99/66” திரைப்படம் மார்ச் 6 ஆம் தேதி வெளியீடு !

ஹாரர் & த்ரில்லர் படமாக உருவாகியுள்ள “99/66” திரைப்படம் மார்ச் 6 ஆம் தேதி வெளியீடு !