“ஒன்னரை கோடி செலவு பண்ணித்தான் தலைவரானேன்” பேரூராட்சி தலைவரின் வில்லங்க ஆடியோ

Spread the love

திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் பேரூராட்சியில் சுமார் 30 ஆயிரம் பேர் வசித்துவரும் நிலையில் மொத்தம் உள்ள 15 வார்டுகளில் தி.மு.க – 6, அ.தி.மு.க – 4, காங்கிரஸ் -2, சுயேட்சை – 3 இடத்திலும் வெற்றி பெற்றிருந்த நிலையில் பேரூராட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் விநாயகா பழனிச்சாமி, தி.மு.க.சார்பில் வேலுச்சாமி போட்டியிட்டனர். இதில் பழனிச்சாமி 8 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். வேலுச்சாமி 6 வாக்குகள் பெற்றார். பின்னர் சுயேச்சை வேட்பாளரான விநாயகா பழனிச்சாமி திமுக வில் இணைந்தார்.

இந்நிலையில் விநாயகா பழனிச்சாமி வார்டு உறுப்பினரிடம் பேசிய வில்லங்க ஆடியோ தற்போது வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 13 வது வார்டு உறுப்பினர் பெரியசாமியுடன் பேசுவதாக கூறப்படும் ஆடியோவில் ஏன் மாப்ள நேத்து ஏன் அப்படி பேசினீங்க, என்ன பழக்கம் இது என குறிப்பிட்டு பேசிவிட்டு பின்னர் 50 ஆயிரம் தான் வாங்கியிருக்கேன், 75 ஆயிரமெல்லாம் வாங்கவில்லை எனவும், எந்த கோயிலில் வந்து சத்தியம் பன்ன தயார் என கூறுகிறார். பின்னர் வாங்கிய பணத்தில் 25 ஆயிரத்தை பஞ்சாயத்து ஈ.ஓ. வுக்கு கொடுத்துவிட்டதாகவும் பழனிச்சாமி வாக்குமூலம் அளித்துள்ளார்.

கவுன்சிலர் பெரியசாமி

மேலும் இதை விட கொடுமை ஒன்னரை கோடி செலவு செய்து தான் தலைவர் பதவிக்கு வந்ததாகவும் உண்மையை எடுத்துரைத்தார். மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜியுடனும், மு.பெ. சாமிநாதனுடன் நெருக்கமாக இருப்பதால் கம்முன்னு இருக்கானுங்கனும், கட்சிக்குள்ள தன்னை ஒன்னும் செய்யமுடியாது எனவும் நீங்க வேலைய பாருங்க மாப்பிள, ரெண்டு காசு சம்பாதிக்க பாருங்க, நாம ஒன்னும் திருடப்போறதில்ல, நாம வாங்கரதுக்கு என்ன? ஆளுக்கு தகுந்த மாதிரி வாங்கலாம் என அதிர்ச்சியூட்டும் வகையில் ஆடியோவில் பேசியுள்ளார்.

மேலும் குறிப்பிட்ட சமூகத்தை பற்றி பேசும்போது குவாட்டர் வாங்கி கொடுத்தால் போதும் எனவும் தரம் தாழ்ந்து பேசியுள்ளார். இந்த ஆடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts

விசாரணைக்குச் சென்ற உதவி ஆய்வாளர் படுகொலை ! காவல்துறைக்கே இந்த நிலைமையா ?.!

Spread the love

Spread the loveதிருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அடுத்துள்ள குடிமங்கலம் அருகேயுள்ள சிக்கனூத்து கிராமத்தில், மடத்துக்குளம் அதிமுக எம்.எல்.ஏ மகேந்திரனுக்கு சொந்தமான தோட்டத்தில், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்த மூர்த்தி என்பவரும் அவரது இரண்டு மகன்களான  தங்கபாண்டியன், மணிகண்டன் ஆகியோர் கடந்த இரண்டு…

Read more

புதிய வழித்தடங்களில் பேருந்துகளை இயக்க  பல்லடம் பாஜகவினர் கோரிக்கை !

Spread the love

Spread the loveபல்லடம் நகர பாரதீய ஜனதா கட்சியின் சார்பாக  பல்லடத்திலிருந்து செல்லும் மாநில நெடுஞ்சாலைகள் வழியாக புதிய வழித்தடத்தில் அரசு புறநகர் பேருந்துகளை இயக்க வலியுறுத்தி பாரதிய ஜனதா கட்சியின் பல்லடம் நகரத் தலைவர் பன்னீர் செல்வகுமார் தலைமையில், பல்லடம்…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பார்க்க தவறிய செய்திகள்

“சொட்ட சொட்ட நனையுது” படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா !

“சொட்ட சொட்ட நனையுது” படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா !

விசாரணைக்குச் சென்ற உதவி ஆய்வாளர் படுகொலை ! காவல்துறைக்கே இந்த நிலைமையா ?.!

விசாரணைக்குச் சென்ற உதவி ஆய்வாளர் படுகொலை ! காவல்துறைக்கே இந்த நிலைமையா ?.!

“சரண்டர்” படத்தின் இசை & ட்ரெய்லர் வெளியீட்டு விழா !

“சரண்டர்” படத்தின் இசை & ட்ரெய்லர் வெளியீட்டு விழா !

“ஜென்ம நட்சத்திரம்” படக்குழுவினரின் நன்றி அறிவிப்பு விழா !

“ஜென்ம நட்சத்திரம்” படக்குழுவினரின் நன்றி அறிவிப்பு விழா !

“கெவி” திரைவிமர்சனம்

“கெவி” திரைவிமர்சனம்