ஆறு மணிக்கு அதிரவைக்கும் வெடிச்சத்தம் ! அதிர்ச்சியில் பொதுமக்கள் !

Spread the love

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மாலை சுமார் ஆறு மணியானதும் அலாரம் வைத்தார் போல் தொடர்ச்சியாக சிறிது இடைவெளி விட்டு அதிர வைக்கும் வெடிச்சத்தம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்லடத்தை அடுத்துள்ள செம்மிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட குப்புசாமிநாயுடுபுரத்தில் பிரபல நூற்பாலை அமைந்துள்ளது. மேலும் இங்கு சுமார் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் குடியிருந்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக மாலை சுமார் ஆறு மணி ஆனதும் மேற்கு பகுதியில் சூரியன் மறைந்த பிறகு ரம்மியமாக காணப்படும். மேலும் மாலை வேளைகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் மேற்கு நோக்கி அணி வகுத்து பறப்பதும், காலையில் கிழக்கு நோக்கி பறவைகள் பறப்பது காண்போரின் கண்ணுக்கு விருந்தாக அமையும். இதனிடையே திடீரென மாலை பயங்கர சத்தத்துடன் மேற்கு பகுதியில் உள்ள தோப்பில் வெடிக்கும் சத்தம் பொதுமக்களை அதிர வைத்துள்ளது. மேலும் தொடர்ச்சியாக வெடிசத்தம் கேட்பதால் மாலை நேரம் கூடு தேடி வரும் பறவைகள் ஆயிரக்கணக்கில் அலறிய படி கூட்டம் கூட்டமாக வானில் வட்டமடிக்கிறது.

மேலும் அதிக சத்தத்துடன் கூடிய வெடிகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், இது போன்ற விஷமிகளின் செயல் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அருகில் உள்ள கோடங்கிபாளையத்தின் கல்குவாரி வெடிச்சத்தம் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், மர்ம வெடிச்சத்தம் குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டால் மட்டுமே வெடியின் வீரியத்தை தவிர்க்க முடியும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

Related Posts

புதிய வழித்தடங்களில் பேருந்துகளை இயக்க  பல்லடம் பாஜகவினர் கோரிக்கை !

Spread the love

Spread the loveபல்லடம் நகர பாரதீய ஜனதா கட்சியின் சார்பாக  பல்லடத்திலிருந்து செல்லும் மாநில நெடுஞ்சாலைகள் வழியாக புதிய வழித்தடத்தில் அரசு புறநகர் பேருந்துகளை இயக்க வலியுறுத்தி பாரதிய ஜனதா கட்சியின் பல்லடம் நகரத் தலைவர் பன்னீர் செல்வகுமார் தலைமையில், பல்லடம்…

Read more

யார் அந்த சார் ? விவகாரத்தில்.. யாரையோ காப்பாற்ற யாருக்கோ தண்டனையா ? பல்லடத்தில் வானதி சீனிவாசன் பேட்டி

Spread the love

Spread the loveதிருப்பூர் வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் மகாராணி அகல்யா பாய் ஹோல்கரின் 300 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி பல்லடம் எம்.சி. பழனிச்சாமி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. பாஜகாவின் தேசிய மகளிர்…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பார்க்க தவறிய செய்திகள்

“லவ் மேரேஜ்” படத்தின் முன்னோட்டம் வெளியீடு !

“லவ் மேரேஜ்” படத்தின் முன்னோட்டம் வெளியீடு !

நூற்பாலையை திறக்கக் கோரி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் !

நூற்பாலையை திறக்கக் கோரி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் !

ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்க, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கோரிக்கை !

ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்க, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கோரிக்கை !

ராமநாதபுரம் பேருந்து நிலையத்திற்கு “ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி” பெயர் சூட்ட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் !

ராமநாதபுரம் பேருந்து நிலையத்திற்கு “ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி” பெயர் சூட்ட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் !

“மெட்ராஸ் மேட்னி” படக்குழுவினரின் நன்றி அறிவிப்பு விழா !

“மெட்ராஸ் மேட்னி” படக்குழுவினரின் நன்றி அறிவிப்பு விழா !