
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகேயுள்ள திப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த பசுபதி, தனது நண்பர்களுடன் துக்க நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்திருக்கிறார். அப்போது சந்தூர் சாலையில் காரை நிறுத்திவிட்டு, ஈமச்சடங்கிற்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தபோது, இவர்கள் வந்த காரில் திடீரென தீப்பற்ற தொடங்கியுள்ளது. இதையடுத்து கார் முழுவதும் மளமளவென தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது.

பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், எரிந்து கொண்டிருந்த காரை தண்ணீர் பீச்சி அனைத்துள்ளனர். அதற்குள்ளாக கார் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்துள்ளது. இதன் காரணமாக சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக, அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து போச்சம்பள்ளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.