பல்லடம் அருகே நிலக்கரி சுரங்கமா ? கண்டுகொள்ளாத வருவாய்த்துறை அதிகாரிகள் !

Spread the love

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே மண் அள்ளும் குட்டையில் நிலக்கரி வெட்டி எடுக்கப்படுவதாக பொதுமக்கள் சந்தேகம் அடைந்துள்ளனர். பல்லடம் தாலுக்கா கே. அய்யம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில், அனுப்பட்டி செல்லும் சாலையின் இருபுறத்திலும் திடீரென பூமி உள்வாங்கியது போல் கோடிக்கணக்கான மதிப்பிலான கிராவல் மண் காணாமல் போயுள்ளது.

மேலும் குறிப்பிட்ட ஆழத்திற்கு பிறகு கருப்பு நிறத்தில் வெட்டி எடுக்கப்பட்டுள்ள பாறைத்துகள்கள் நிலக்கரி கல் போல் காட்சி அளிக்கிறது. இது வரை எந்த ஒரு இடத்திலும் சட்டவிரோதமாக மண் அள்ளப்படும்போது, கருப்பு நிறத்தில் மண் காணப்பட்டதில்லை. இந்த அதிசய நிகழ்வினை கண்டுபிடித்து விசாரணை மேற்கொள்ளவேண்டிய கிராம நிர்வாக அலுவலர் முதல் வருவாய் துறை வரையுள்ள அதிகாரிகள் உறக்கத்தை கலைத்து உண்மையை கண்டறிய வேண்டும். குளம் குட்டைகளை தூர்வாரிவநத நிலையில், தற்போது மண் வளம் மறைந்து நிலக்கரி கிடைக்க ஆரம்பித்திருக்கிறதா ? அல்லது மண் தன்மை விஷமாக மாறியுள்ளதா ? என மண் பரிசோதனை மூலம் வருவாய் துறை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

மேலும் மண் அள்ளப்பட்ட குட்டைக்கு மிக அருகிலேயே அதிக மின் அழுத்த டவர்லைன் செல்வதால் ஆபத்து ஏற்ப்படவும் வாய்ப்புள்ளது. திடீரென பல்லடத்தில் மக்கள் நடமாட்டமுள்ள சாலையின் இருபுறமும் சட்டவிரோத மண் அள்ளும் கும்பல் ரகசியமாக வெட்டப்பட்ட இடத்தை ஆய்வு செய்து மண் திருட்டை தடுக்க மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Posts

புதிய வழித்தடங்களில் பேருந்துகளை இயக்க  பல்லடம் பாஜகவினர் கோரிக்கை !

Spread the love

Spread the loveபல்லடம் நகர பாரதீய ஜனதா கட்சியின் சார்பாக  பல்லடத்திலிருந்து செல்லும் மாநில நெடுஞ்சாலைகள் வழியாக புதிய வழித்தடத்தில் அரசு புறநகர் பேருந்துகளை இயக்க வலியுறுத்தி பாரதிய ஜனதா கட்சியின் பல்லடம் நகரத் தலைவர் பன்னீர் செல்வகுமார் தலைமையில், பல்லடம்…

Read more

யார் அந்த சார் ? விவகாரத்தில்.. யாரையோ காப்பாற்ற யாருக்கோ தண்டனையா ? பல்லடத்தில் வானதி சீனிவாசன் பேட்டி

Spread the love

Spread the loveதிருப்பூர் வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் மகாராணி அகல்யா பாய் ஹோல்கரின் 300 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி பல்லடம் எம்.சி. பழனிச்சாமி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. பாஜகாவின் தேசிய மகளிர்…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பார்க்க தவறிய செய்திகள்

“லவ் மேரேஜ்” படத்தின் முன்னோட்டம் வெளியீடு !

“லவ் மேரேஜ்” படத்தின் முன்னோட்டம் வெளியீடு !

நூற்பாலையை திறக்கக் கோரி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் !

நூற்பாலையை திறக்கக் கோரி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் !

ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்க, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கோரிக்கை !

ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்க, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கோரிக்கை !

ராமநாதபுரம் பேருந்து நிலையத்திற்கு “ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி” பெயர் சூட்ட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் !

ராமநாதபுரம் பேருந்து நிலையத்திற்கு “ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி” பெயர் சூட்ட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் !

“மெட்ராஸ் மேட்னி” படக்குழுவினரின் நன்றி அறிவிப்பு விழா !

“மெட்ராஸ் மேட்னி” படக்குழுவினரின் நன்றி அறிவிப்பு விழா !