
இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் போர் நடைபெற்று வருவதைத் தொடர்ந்து, பொதுமக்கள் வசிக்கும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது. இந்த துப்பாக்கி சண்டையில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். எல்லையில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் அத்துமீறலில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க இந்திய ராணுவ வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். மேலும் காஷ்மீர் பகுதியில் ஏழு தீவிவாதிகளை சுட்டு வீழ்த்தியது உள்ளனர்.
இந்நிலையில் நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு அதிகரித்துள்ளது. எல்லையோர மாநிலங்களில் 27 விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் மூன்று நாட்களுக்கு விடுமுறையும், காஷ்மீர் மாநிலத்தில் காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ராணுவத்திற்கு ஆதரவைத் தெரிவிக்கும் விதமாக நாளை சென்னையில் டிஜிபி அலுவலகத்திலிருந்து போர் நினைவுச்சின்னம் வரை பேரணி நடைபெறும் எனவும், அந்தப் பேரணியில் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு இந்திய ராணுவ வீரர்களுக்கு தெரிவிக்குமாறு முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் காஷ்மீர் மாநிலத்தில் தங்கி படித்துவரும் 52 மாணவர்களை பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பெற்றோர்கள் அச்சப்பட வேண்டாம் என முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.