தமிழகத்தில் போதைப்பொருட்கள் விற்பனையே இல்லை என சமீபத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியிருந்தார். ஆனால் பிரபல கஞ்சா வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளார். அதோடு அவர் திமுக நிர்வாகி என்பதும் குறிப்பிடத்தக்கது. இது சம்பந்தமாக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்… சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண் கஞ்சா வியாபாரி ஒருவர், 18 வது முறையாக கைது செய்யப்பட்டிருக்கிறார். இதில் உச்சகட்ட நகைச்சுவை என்னவென்றால், தமிழ்நாட்டில் “கஞ்சா நடமாட்டமே இல்லை” என்று கூறிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுடனும், இந்தப் பெண் கஞ்சா வியாபாரி புகைப்படம் எடுத்திருக்கிறார்.
ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழக மாணவி மீது பாலியல் வன்முறையில் ஈடுபட்ட பாலியல் குற்றவாளி ஞானசேகரனுடனான புகைப்படத்துக்கு பல காரணங்களைச் சொல்லி மழுப்பிய, அமைச்சர் மா. சுப்பிரமணியன், பல முறை கைது செய்யப்பட்ட கஞ்சா வியாபாரியுடனான புகைப்படத்துக்கு என்ன பதில் சொல்லப் போகிறார் ?

இந்நிலையில், அந்தப் பெண் கஞ்சா வியாபாரி, 196 வது ‘அ’ வட்ட கண்ணகிநகர் திமுக துணை செயலாளர் என்று கூறப்படுகிறது. அமைச்சர்கள் வரை நெருக்கமாக இருக்கும் போதைப் பொருள் வியாபாரிகள் மற்றும் பாலியல் குற்றவாளிகள், திமுகவை தங்கள் கூடாரமாக வைத்திருப்பதில் ஆச்சரியமில்லை என பதிவிட்டுள்ளார்.






