34 ஆண்டுகளாக பொது மக்களின் கோரிக்கைகளை கண்டுகொள்ளாத அதிகாரிகள் !

Spread the love

கோயம்புத்தூர் மாவட்டம், கோவை வடக்கு வட்டாரத்தில் உள்ள விளாங்குறிச்சி கிராமத்தில், முருகன் நகர், விநாயகபுரம், சங்கரா நகர் ஆகிய இடங்களில் வசிக்கும் பொதுமக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 34 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாத தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்துள்ளனர்.

இது சம்பந்தமாக குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் சம்பத்குமார் கூறுகையில், கணபதி புறநகர் திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் 1991 ஆம் ஆண்டு நிலங்களை கைபயகப்படுத்தி, 1994 ஆம் ஆண்டு இழப்பீடு தொகையையும் நிர்ணயம் செய்து நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதன்பிறகு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போட்டுவிட்டது. மேலும் அந்த இடத்தில் எந்தவித வீட்டுவசதி திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை. அந்த காலி வீட்டுமனைகளை பத்திரப்பதிவு செய்து வாங்கிய 500 பேர், உள்ளாட்சி அமைப்புகளில் அனுமதி பெற்று, கட்டிடங்கள் கட்டி குடியிருந்து வருகின்றனர். மேலும் மின்சார கட்டணம், தண்ணீர் வரி, சொத்துவரி உள்ளிட்ட அனைத்து கட்டணங்களையும் அரசுக்கு முறையாக செலுத்தி வருகின்றனர். இங்கு 2500 பேர் வாக்குரிமை பெற்று ஒவ்வொரு தேர்தலிலும் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது இப்பகுதியில் உள்ள இடங்கள் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்திற்கு சொந்தமானது எனக்கூறி, பட்டா மாறுதல், பெயர் மாற்றம், கட்டிட அனுமதி, ஆவணப்பதிவு வரன்முறை படுத்துதல் உள்ளிட்ட அரசு பணிகள் மறுக்கப்படுகிறது. ஆகையால் இப்பகுதியில் வசித்துவரும் ஏழை எளிய நடுத்தர மக்கள் தங்களின் தேவைகளுக்காக சொத்துக்களை விற்பனை செய்யவும், கட்டிட அனுமதி பெற்று கட்டுமான பணிகளை மேற்கொள்ளவும் அனுமதி வழங்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்துள்ளோம் என்று கூறினார்.

Related Posts

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி பணியிடமாற்றம் !

Spread the love

Spread the loveபொள்ளாச்சி பாலியல் வழக்கில் மே 13ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என கோவை மகளிர் நீதிமன்றம் அறிவித்த சில நிமிடங்களிலேயே அந்த நீதிபதி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பொள்ளாச்சி பாலியல் குற்றம் தொடர்பாக கடந்த 2019 ஆம் ஆண்டு…

Read more

கூலி வேலை செய்யும் விசைத்தறியாளர்களின் கோரிக்கைகளை  நிறைவேற்ற வேண்டும். அண்ணாமலை வலியுறுத்தல் ! 

Spread the love

Spread the loveகோவை, திருப்பூர் மாவட்டங்களில், விசைத்தறிகள் மூலம், சுமார் ஏழு லட்சம் மக்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறையும், ஜவுளி உற்பத்தியாளர்கள், நெசவாளர்கள், கோவை திருப்பூர் மாவட்ட ஆட்சியாளர்கள் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி, விசைத்தறி…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பார்க்க தவறிய செய்திகள்

“பூங்கா” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா !

“பூங்கா” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா !

“வீர தமிழச்சி” படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா !

“வீர தமிழச்சி” படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா !

34 ஆண்டுகளாக பொது மக்களின் கோரிக்கைகளை கண்டுகொள்ளாத அதிகாரிகள் !

34 ஆண்டுகளாக பொது மக்களின் கோரிக்கைகளை கண்டுகொள்ளாத அதிகாரிகள் !

இராமநாதபுரத்தில் தொகுதி அளவிலான விளையாட்டு போட்டிகள் !

இராமநாதபுரத்தில் தொகுதி அளவிலான விளையாட்டு போட்டிகள் !

“சுமதி வளவு” திரைப்படம் செப்டம்பர் 26 முதல் ஜீ-5 தளத்தில் வெளியீடு !

“சுமதி வளவு” திரைப்படம் செப்டம்பர் 26 முதல் ஜீ-5 தளத்தில் வெளியீடு !