Spread the love

ஈரோடு அருகே பட்டப்பகலில் நெடுஞ்சாலையில் வைத்து ரவுடி ஜான் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியினரை அதிர்ச்சியில் வாழ்த்தி உள்ளது அதாவது தமிழகத்தில் குற்ற சம்பவங்கள் எந்த அளவு கொடுமையாக நடந்து வருகிறது என்பதை வெளிச்சம் போட்டு காட்டும் விதமாக இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாக அப்பகுதியினர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

கொலை, வழிப்பறி அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சிறையில் இருந்த சேலம் கிச்சிப்பாளையத்தை சேர்ந்த ரவுடி ஜான் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ளார். நிபந்தனையின்படி அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் தினசரி கையெழுத்திட வேண்டும். இதற்காக காலையில் திருப்பூரிலிருந்து சேலத்திற்கு தனது மனைவியுடன் காரில் சென்றுள்ளார்.

பின்னர் இருவரும் திருப்பூருக்கு காரில் திரும்பி உள்ளனர். இவர்களை பின் தொடர்ந்து வந்த ஒரு கும்பல், நசியனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஜான் சென்ற கார் மீது மற்றொரு காரை விட்டு மோதி மரித்துள்ளனர். பின்னர் காரிலிருந்து இறங்கிய கும்பல், ஜானை காரிலிருந்து இறங்கு விடாமல், சரமாரியாக வெட்டியுள்ளனர். கொலையை தடுக்கும் போது ஜானின் மனைவி சரண்யாவும் காயம் அடைந்துள்ளார்.

இதில் கொலை கும்பலைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவரும் காயமடைந்துள்ளார். அவரை காவல்துறையினர் பிடித்த நிலையில், அவர் அளித்த தகவலின் பேரில், காரில் தப்பி சென்ற கொலைகும்பலை காவல்துறையினர் மடக்கி பிடித்துள்ளனர்.

அப்போது காவல்துறையினரை அந்த கும்பல் தாக்கியுள்ளது. இதில் சித்தோடு காவல் ஆய்வாளர் ரவி, முதல் நிலை காவலர் யோகேஷ் ஆகிய இருவரும் காயம் அடைந்துள்ளனர். இதையடுத்து குற்றவாளிகளை காவல்துறையினர் சுட்டுப் பிடித்துள்ளனர். இதில் சுதீஷ், சரவணன், பூபாலன் ஆகியோர் துப்பாக்கி சூட்டில் காயமடைந்துள்ளனர்.