58 கிராம கால்வாயில் தண்ணீர் திறக்காத தமிழ்நாடு அரசுக்கு பாஜக கண்டனம் !

Spread the love

வைகை அணையில் நீர் நிரம்பியுள்ள நிலையில், உசிலம்பட்டியின் ஜீவாதாரமான 58 கிராம கால்வாய் திட்டத்திற்கு தற்போது வரை தண்ணீர் திறக்காமல் இருக்கும் தமிழ்நாடு அரசைக் கண்டித்து பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில்.. வழக்கமாக வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியவுடன் 58 கிராம கால்வாய்க்கு தண்ணீர் திறந்துவிடப்படும் நிலையில், தற்போது 69 அடிக்கு மேல் நீர் நிரம்பி, இரண்டு முறை வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டும் தண்ணீர் திறக்கப்படவில்லை. திமுக அரசின் இந்த அலட்சியப்போக்கால் 50,000 மக்களுக்கான குடிநீர் தேவை, 2,336 ஏக்கர் அளவு பரந்துள்ள விவசாயத்திற்கான பாசனம் மற்றும் கால்நடை வளர்ப்பு என அனைத்தும் பாதிக்கப்பட்டு 110 கிராம மக்கள் தவிக்கவிடப்பட்டுள்ளனர்.

திமுக அரசின் அராஜகப் போக்கைக் கண்டித்தும் கால்வாய்க்கு தண்ணீர் திறந்துவிடக் கோரியும் விவசாயப் பெருமக்களுடன் இணைந்து நமது தமிழக பாஜக போராட்டம் நடத்தியதோடு, வணிகர்களும் கடையடைப்புப் போராட்டம் நடத்தினர். இதுபோன்று தொடர்ந்து தினந்தோறும் பொதுமக்கள் அனைவரும் போராடி வரும் வேளையில், அவர்களின் கோரிக்கைகளுக்கு செவிமடுக்காமல், வெற்று விளம்பரங்களிலும் அரசியல் பிரச்சாரங்களிலும் மூழ்கியுள்ளது திராவிட மாடல் அரசு.

கடந்த நான்காண்டுகளில் டாஸ்மாக்தோறும் சாராயத்தின் வரத்து மட்டும் என்றும் குறையாத நிலையில், கிராமந்தோறும் குடிநீர் மற்றும் பாசனத்திற்கான நீர் வரத்து மட்டும் குறைவது ஒன்றே திமுகவின் “நாடு போற்றும் நல்லாட்சியின்” சாதனை சரித்திரத்தை உணர்த்தும். தாகத்தில் தவிக்கவிட்டு நீருக்காக நித்தம் நித்தம் போராட வைக்கும் இந்த திமுக அரசை ஆட்சி அரியணையிலிருந்து நீக்குவோம் ! நீராதாரம் காத்து தமிழகத்தின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவோம் ! என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts

பாலை ரோட்டில் கொட்டி, அரசுக்கு எதிராக முழக்கமிட்ட பால் உற்பத்தியாளர்கள் !

Spread the love

Spread the love தமிழ்நாடு அரசு பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும். மதுரை ஆவின் நிர்வாகம் லாபத்தில் 50 சதவீதம் போனஸ்…

Read more

எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட காவலர்

Spread the love

Spread the loveமதுரை விமான நிலையம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஈச்சனேறி பகுதியில் பாதி எரிந்த நிலையில், அடையாளம் தெரியாத இளைஞரின் சடலம் கிடந்துள்ளது. சடலத்தை கைப்பற்றி பெருங்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். இந்த நிலையில், கைப்பற்றப்பட்ட அந்த…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பார்க்க தவறிய செய்திகள்

“பிளாக்மெயில்” படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு !

“பிளாக்மெயில்” படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு !

“லோகா” படக்குழுவினரின் நன்றி அறிவிப்பு நிகழ்வு !

“லோகா” படக்குழுவினரின் நன்றி அறிவிப்பு நிகழ்வு !

“இரவின் விழிகள்” படப்பிடிப்பில் நாயகியை சில்மிஷம் செய்த இளைஞர்கள் !

“இரவின் விழிகள்” படப்பிடிப்பில் நாயகியை சில்மிஷம் செய்த இளைஞர்கள் !

“குமார சம்பவம்” படத்தின் முன்னோட்டம் வெளியீட்டு விழா !

“குமார சம்பவம்” படத்தின் முன்னோட்டம் வெளியீட்டு விழா !

“கட்டா குஸ்தி-2” படப்பிடிப்பு பூஜையின் துவங்கியது !

“கட்டா குஸ்தி-2” படப்பிடிப்பு பூஜையின் துவங்கியது !