
இந்தியா – பாகிஸ்தான் இடையே எல்லைப்பகுதியில் தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. போர் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில், தவறான தகவல்களை பரப்பும் செயல்களில் தொடர்ந்து பாகிஸ்தான் ஈடுபட்டு வருகிறது. ஶ்ரீ நகர் எல்லைக்கட்டுப்பாடு பகுதியில் போர் விமானங்கள் மூலம் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது. ஐந்து இடங்களில் இந்தியா பாகிஸ்தான் இடையே கடும் மோதல் நடைபெற்று வருகிறது. அங்குள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை தேவைகளையும் அம்மாநில அரசு செய்து கொடுத்துள்ளது.
பாகிஸ்தான் தொடர்ந்து பயணிகள் விமான நிலையங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், பதில் தாக்குதல் நடத்தி பாகிஸ்தானின் சதிகளை முறியடித்து வருகின்றனர். பாகிஸ்தானின் ஆறு ராணுவ தளங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளது. ஆனால் இந்தியாவின் 26 ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் ஈடுபட்டு வருகிறது. மேலும் இந்தியாவின் வெடிமருந்து கிடங்கை அழித்துவிட்டதாக பாகிஸ்தான் பொய் பிரச்சாரம் செய்து வருகிறது. பாகிஸ்தானின் ராணுவ தளங்களை அழித்துவிட்டதாக இந்தியா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பாகிஸ்தானின் அத்துமீறலுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.