
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு நாள் பயணமாக சென்னை வந்துள்ளார். முதல்நாளில் தெலுங்கானா, புதுச்சேரியின் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜனின் இல்லத்திற்கு சென்று அவரது தந்தை குமரி ஆனந்தனின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டனி அமைத்து போட்டியிடுவது உறுதிசெய்து இருவரும் கூட்டாக அறிவித்தனர்.

இந்நிலையில் ஆந்திரப் பிரதேசத்தின் துணை முதலமைச்சரும், ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண் வாழ்த்த்து தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், பொதுத்தேர்தலில் பாஜகவும், அதிமுகவும் இணைந்து போட்டியிடுவது வரவேற்கத்தக்கது. பாஜக அதிமுக கூட்டணிக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். கூட்டிணியின் சார்பில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமியின் பெயர் அறிவிக்கப்பட்டது.

நிர்வாக அனுபவம் உள்ளவர்களிடம் பொறுப்புக்களை ஒப்படைப்பதாக தமிழக மக்களுக்கு இந்த கூட்டணி அறிவித்துள்ளது. பழனிச்சாமிக்கு வாழ்த்துக்கள். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக் கொள்கைகள் மூலம் மாநிலங்களின் வளர்ச்சி சாத்தியமாகும். தேசிய ஜனநாயக கூட்டணியால் தமிழகம் நிச்சயம் பயனடையும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.