உதவி ஆய்வாளர் கொலை ! தலைமறைவான பெண்ணின் உறவினர்களிடம் தீவிர விசாரணை

Spread the love

நெல்லை டவுன் தொட்டிப்பாலம் தெருவை சேர்ந்த ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ஜாகீர் உசேன் பிஜிலி (60) கடந்த 18ம் தேதி பள்ளிவாசலில் தொழுகையை முடித்து வீடு திரும்பும் போது, மூன்று பேர் சேர்ந்து வெட்டிக் கொலை செய்தனர்.

இதுதொடர்பாக டவுன் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், தொட்டிப்பாலம் பகுதியில் நில சம்பந்தமான மோதலில் இந்த கொலை நடந்திருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் கிருஷ்ணமூர்த்தி, அவரது உறவினர்கள் கார்த்திக், அக்பர்ஷா மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணமூர்த்தியின் மனைவி நூர்நிஷா தலைமறைவாக உள்ள நிலையில், அவர் யாருடைய உதவியுடன் மறைந்துள்ளார் என்பதைக் கண்டுபிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோர்ட்டில் சில காலங்கள் பணியாற்றிய அனுபவம் கொண்ட நூர்நிஷா, சிலரின் ஆதரவை பெற்றிருக்கலாம் என்பதால், அவருக்கு அடைக்கலம் அளித்திருக்கக்கூடிய நபர்களை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

இதேநேரத்தில், ஜாகீர் உசேன் பிஜிலியின் மகன் இச்சூர் ரகுமான், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி சமீபத்தில் வெளியிட்ட வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, கமிஷனர் சந்தோஷ் ஹதிமணியின் உத்தரவின் பேரில், அவரது வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.

தலைமறைவாக உள்ள நூர்நிஷாவின் இருப்பிடத்தை கண்டறிய, அவருடைய உறவினர்களிடம், குறிப்பாக அவரது சகோதரர் பீர் முகமது உள்ளிட்ட குடும்பத்தினரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், இந்த கொலை வழக்கில் இவர்களுக்கும் தொடர்பு இருக்கிறதா என்பதை ஆய்வு செய்து, தேவையானால் முதல் தகவல் அறிக்கையில் அவர்களது பெயர்களும் சேர்க்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Posts

மாவட்ட அறிவியல் மைய பெயர் பலகையில் “இந்தி” எழுத்துக்கள் சேர்ப்பு

Spread the love

Spread the loveதமிழகத்தில் மும்மொழிக் கொள்கை தொடர்பான சர்ச்சை நீடித்து வரும் நிலையில், திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தின் பெயர் பலகையில், இந்தி எழுத்துக்கள் சேர்க்கப்பட்டுள்ளது அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் இந்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் செயல்படும்,…

Read more

ஓய்வுபெற்ற காவல் அதிகாரி வீடியோ  படுகொலை ! நெல்லையில் பரபரப்பு !

Spread the love

Spread the loveதிருநெல்வேலியில் ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில், இருவர் சரணடைந்துள்ளனர். தனக்கு கொலை மிரட்டல் வருவதாகவும், புகார் கொடுத்தாலும் நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் சம்பந்தப்பட்ட நபர் வீடியோ வெளியிட்ட நிலையில், இந்த கொலை சம்பவம்…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பார்க்க தவறிய செய்திகள்

“லவ் மேரேஜ்” படத்தின் முன்னோட்டம் வெளியீடு !

“லவ் மேரேஜ்” படத்தின் முன்னோட்டம் வெளியீடு !

நூற்பாலையை திறக்கக் கோரி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் !

நூற்பாலையை திறக்கக் கோரி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் !

ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்க, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கோரிக்கை !

ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்க, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கோரிக்கை !

ராமநாதபுரம் பேருந்து நிலையத்திற்கு “ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி” பெயர் சூட்ட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் !

ராமநாதபுரம் பேருந்து நிலையத்திற்கு “ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி” பெயர் சூட்ட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் !

“மெட்ராஸ் மேட்னி” படக்குழுவினரின் நன்றி அறிவிப்பு விழா !

“மெட்ராஸ் மேட்னி” படக்குழுவினரின் நன்றி அறிவிப்பு விழா !