முதல் முறையாக தமிழ்நாட்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிட்ட முதலமைச்சர் !

Spread the love

தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2025-2026 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், தமிழ்நாடு அரசு முதன்முறையாக ஒன்றிய அரசை போன்று, பொருளாதார அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் 2024-2025 ஆம் நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.48 சதவீதமாக இருக்கும் என மத்திய அரசு கணித்துள்ள நிலையில், கடந்த 2021-2022 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டின் பொருளாதர வளர்ச்சி எட்டு சதவிகித்திற்கு மேலாக இருந்து வருவதாக ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோன்று 2024-2025 ஆம் நிதி ஆண்டிலும் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி எட்டு சதவிகித்திற்கும் மேல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. தேசிய அளவில் ஆறு சதவீத மக்கள் தொகை கொண்ட தமிழ்நாடு கடந்த 2023-2024 ஆம் நிதியாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.21% பங்களித்திருப்பதாகவும், தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 27 லட்சத்தி 22 கோடியாக உள்ளது. தனிநபர் வருமானத்தை பொறுத்தவரையில் தேசிய சராசரியை விட அதிகமாகவும், நாட்டிலேயே நாளாவது பெரிய மாநிலமாகவும் தமிழ்நாடு திகழ்வதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி கோவை, மதுரை, திருப்பூர், சேலம் ஆகிய நகரங்களுக்கு பரவலாக்கப்பட்டது. நகரம், கிராமம் இடையிலான வேறுபாடுகளை குறைக்க உதவி இருப்பதாக ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தொடக்கக்கல்வி முதல் உயர் கல்வி வரையிலான மாணவர் சேர்க்கை, ஆசிரியர், மாணவர் விகிதம் உள்ளிட்டவற்றில் தேசிய சராசரியை விட தமிழ்நாடு அதிகமாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் இந்திய ரூபாய் நாணயத்தின் ₹ குறியீடுக்கு பதிலாக ரூ என்ற தமிழ் வார்த்தையை தமிழ்நாடு அரசு முதன்மைப்படுத்தி உள்ளது.

Related Posts

இந்திய ராணுவத்திற்கு ஆதரவைத் தெரிவிக்கும் வகையில், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் பேரணி !

Spread the love

Spread the loveஇந்தியா – பாகிஸ்தான் எல்லையில் போர் நடைபெற்று வருவதைத் தொடர்ந்து, பொதுமக்கள் வசிக்கும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது. இந்த துப்பாக்கி சண்டையில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். எல்லையில் பாகிஸ்தான் ராணுவ…

Read more

பாகிஸ்தான் தாக்குதலில் 13 பேர் உயிரிழப்பு ! காஷ்மீரில் பதற்றம் நீடிப்பு !

Spread the love

Spread the loveஇந்தியா – பாகிஸ்தான் எல்லையில் போர் நடைபெற்று வருவதைத் தொடர்ந்து, பொதுமக்கள் வசிக்கும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது. இந்த துப்பாக்கி சண்டையில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். எல்லையில் பாகிஸ்தான் ராணுவ…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பார்க்க தவறிய செய்திகள்

“லவ் மேரேஜ்” படத்தின் முன்னோட்டம் வெளியீடு !

“லவ் மேரேஜ்” படத்தின் முன்னோட்டம் வெளியீடு !

நூற்பாலையை திறக்கக் கோரி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் !

நூற்பாலையை திறக்கக் கோரி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் !

ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்க, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கோரிக்கை !

ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்க, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கோரிக்கை !

ராமநாதபுரம் பேருந்து நிலையத்திற்கு “ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி” பெயர் சூட்ட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் !

ராமநாதபுரம் பேருந்து நிலையத்திற்கு “ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி” பெயர் சூட்ட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் !

“மெட்ராஸ் மேட்னி” படக்குழுவினரின் நன்றி அறிவிப்பு விழா !

“மெட்ராஸ் மேட்னி” படக்குழுவினரின் நன்றி அறிவிப்பு விழா !