
தமிழ்நாடு அரசின் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நாளை 14 ஆம் தேதி சட்டமன்றத்தில் 2025-2026 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார். இந்நிலையில் நிதிநிலை அறிக்கைக்கான லட்சினையை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதில் ரூபாயை குறிக்கும் தேவ நாகரிக எழுத்தான ( ₹ ) என்பதற்கு பதிலாக தமிழ் எழுத்தான ரூ என்னும் எழுத்தை பயன்படுத்தி லட்சினை வெளியிடப்பட்டுள்ளது
புதிய கல்விக் கொள்கையும், அதில் இருக்கும் மும்மொழி கொள்கையை ஏற்க மாட்டோம் என்றும் தமிழ்நாட்டில் இரு மொழி கொள்கைதான் நீடிக்கும் என, தமிழ்நாடு அரசு வலுவாக சொல்லி வருகிறது. இந்நிலையில் இந்தி மொழிக்கு அடிப்படையாக இருக்கும் தேவ நாகரிக குறியீடான (₹ ) என்பதற்கு பதிலாக தமிழ் எழுத்தான ரூ பயன்படுத்தி இருப்பது அனைவரின் கவனத்தைப் பெற்றுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில், தமிழர் ஒருவர் உருவாக்கி பாரதம் முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ரூபாய் ( ₹ ) சின்னத்தை, தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கையில் மாற்றுகிறது. தமிழ்நாடு அரசு மாற்றி உள்ள ரூபாய் குறியீடு திமுக முன்னாள் எம்எல்ஏ வின் மகன் உருவாக்கியது என பதிவிட்டுள்ளார்