
மகனை கடத்தி விட்டதாக சென்னையில் வசிக்கும் பெண் ஒருவர் புகார் அளித்த நிலையில், அவர் பாதுகாப்புடன் தன்னிடம் தான் இருப்பதாக அவரது தந்தை வீடியோ மூலம் விளக்கம் அளித்துள்ளார்.
அமெரிக்கா வாழ் தமிழரான திவ்யா என்பவர் சென்னை அண்ணாநகரில் வசித்து வருகிறார். இவருக்கும் தொழிலதிபர் பிரசன்னா என்பவருக்கும் திருமணம் ஆகி 9 வயதில் ஆண் குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து உள்ளனர்.
இந்நிலையில், தனது பாதுகாப்பில் இருந்து வந்த மகனை, கணவருடைய உதவியாளர் என்று கூறி ஒருவர் கடத்திச் சென்று விட்டதாக திருமங்கலம் காவல் நிலையத்தில் திவ்யா புகார் அளித்துள்ளார். இந்நிலையில், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவரது மகனன கடத்தியதாக கணவர் பிரசன்னா, தனது மகன் தன்னிடம் பாதுகாப்புடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். இது குறித்து திருமங்கலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.