புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஸ்ரீ விருத்தபுரீஸ்வரர், ஸ்ரீ தர்மவர்த்தினி கோயில் திருவிழா ஆண்டு வரும் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 11ஆம் தேதி நடைபெற்றது. இதையடுத்து 12-ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெற இருந்த நிலையில், அன்று மழை பெய்ததால் ஜல்லிக்கட்டு போட்டி ஒத்திவைக்கப்பட்டு இன்று நடைபெற்றது.

இதையடுத்து ஜல்லிக்கட்டு போட்டிக்கு வந்திருந்த பொது மக்களுக்கு அன்னவாசல் இஸ்லாமியர்கள், சுவையான வெஜிடபிள் பிரியாணியை அன்னதானமாக வழங்கினர். இஸ்லாமியர்கள் புனித ரமலான் மாத நோன்பு வைத்துள்ள நிலையில், கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிக்கு வந்திருந்த பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் அன்னதானம் வழங்கிய செயல் அப்பகுதியில் நிகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.